யாழில் துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலி (காணொளி)

407 0

யாழ்ப்பாணம் மணியம்தோட்டத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இளைஞன், உயிரிழந்துள்ளார்.

இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டின் பின்னர், யாழ் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த டொன் போஸ்கோ டெஸ்மன் என்ற இளைஞனுக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

இதனையடுத்து, குறித்த இளைஞன் இன்று இரவு 08.55 மணியளவில் உயிரழந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மரண விசாரணை அதிகாரி, நீதிபதி மற்றும் பொலிஸாரின் விசாரணைகளின் பின்னரே சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

முன்னதாக, யாழ்ப்பாணம் மணியம்தோட்ட பகுதியில் இனந்தெரியாதோரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபருக்கு கடுமையான இரத்த போக்கு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது சுவாசப்பை பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாகவும் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியக்கலாநிதி ரி.சத்தியமூர்த்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த டொன் போஸ்கோ டெஸ்மன் என்ற இளைஞனுக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

இன்று பிற்பகல் 3.30 மணியளவில் யாழ்ப்பாணம் மணியம் தோட்டம் உதயபுரம் கடற்கரை வீதி சந்தியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த டொன் போஸ்கோ டெஸ்மன் மற்றும், நிஷாந்தன் ஆகியோர் மீது இனந்தெரியாதோரால் துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டது.

இத் துப்பாக்கி சூட்டு தாக்குதலில் டொன் போஸ்கோ டெஸ்மன் என்பவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்படடிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த துப்பாக்கிச் சூட்டையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது, துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கான இளைஞருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றைய இளைஞனான நிஷாந்தன், பொலிஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக பொலிஸ் தடயவியல் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, துப்பாக்கிச் சூட்டில் முதுகில் காயமடைந்த குறித்த இளைஞன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைக் கூடத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிக் சூட்டிற்கு இலக்கான இளைஞனின் உறவினர்கள் வைத்தியசாலையில் குழுமியிருந்தனர்.

இந்நிலையில் இன்று இரவு 08.50 மணிக்கு துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞன் உயிரிழந்தார்.

Leave a comment