நேற்றைய தினம் வவுனியாவிற்கான பயணத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புங்குடு தீவு மாணவி வித்தியாவின் குடும்பத்தினரை சந்தித்தார்.
வவுனியா, குருமண்காட்டில் அரசாங்கத்தினால் வித்தியாவின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட வீட்டிற்கு சென்ற ஜனாதிபதி அங்குவசிக்கும் வித்தியாவின் குடும்பத்தினரை சந்தித்தார்.
அமைச்சர் கயந்த கருணாதிலக்க, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஆகியோரும் அங்கு சென்றிருந்தனர்.

