தேசிய சுகாதார சேவைக்கு ஆபத்து- GMOA

335 0

புதிய அரசியல் அமைப்பு ஊடக தேசிய சுகாதார சேவைக்கு ஆபத்து ஏற்படும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்திய கலாநிதி ஹரித்த அலுத்கே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

புதிய அரசியலமைப்பின் ஊடக மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்கள், மாகாணங்களுக்கு பகிரப்படுகிறது.

இதனால் தேசிய கொள்கையின்கீழ் உள்ள சிகிச்சை பணிகள் பாதிக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டெங்கு பாதிப்புக்கான கொள்கைகள் கூட இதனால் பாதிக்கப்படும் என்று ஹரித்த அலுத்கே தெரிவித்தார்.

ஏற்கனவே இலங்கையில் ஒழிக்கப்பட்டுள்ள போலியோ மலேரியா போன்ற நோய்களும் மீண்டும் பரவக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Leave a comment