கொழும்பில் உள்ள சட்டவிரோத விளம்பரப்பலகைகளை அகற்ற நடவடிக்கை

311 0

bCUZHwDகொழும்பு நகரசபைக்குட்டபட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் சட்டவிரோத விளம்பரப்பலகைகள் அனைத்தும் இன்று நள்ளிரவுக்கும் அகற்றப்படவுள்ளதாக கொழும்பு நகரசபை தெரிவித்துள்ளது.

நகரசபையின் அனுமதியின்றி நகரின் அழகிற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளே அகற்றப்படவுள்ளதாக கொழும்பு நகர ஆணையாளர் வீ.கே.ஏ.அநுர தெரிவித்துள்ளார்.

எனவே குறித்த விளம்பர பலகைகளுக்கு உரிய நிறுவனங்களிடம் அதனை அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு குறித்த நிறுவனங்களால் அகற்றப்படாத விளம்பர பலகைகளை நகர சபை அகற்றவுள்ள அதேவேளை அகற்றுவதற்காக ஏற்படும் செலவினை விளம்பரங்களுக்கு உரிய நிறுவனங்களிடம் வசூலிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.