ரயில்வே திணைக்களத்திற்கு 6000 மில்லியன் ரூபா வருடாந்தம் நஷ்டம்

320 0

அண்­மையில் முன்­னெ­டுக்­கப்­பட்ட ஒரு நாள் ரயில்வே ஊழி­யர்­களின் வேலை­நி­றுத்தம் கார­ண­மாக 17 மில்­லியன் ரூபா நட்டம் ஏற்­பட்­டது.

மேலும் நாட்டின் ரயில்வே திணைக்­களம் வரு­டாந்தம் 6000 மில்­லியன் ரூபா நட்­டத்தில் இயங்கி கொண்­டி­ருக்­கின்­றது. இதன்­படி தொழிற்­சங்­கங்கள் முன்­வைக்கும் கோரிக்கை அநீ­தி­யா­னது. ஆகையால்

ரயில்வே ஊழி­யர்கள் வேலை­நி­றுத்த போராட்­டத்தை நடத்த கூடாது என்று போக்­கு­வ­ரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா சபையில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை மோட்டார் வாகனச் சட்­டத்தின் ஒழுங்­கு­வி­திகள் மீதான விவா­தத்தை ஆரம்­பித்து வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்.

சம்­பள அதி­க­ரிப்­பினை வலி­யு­றுத்தி ரயில்வே தொழிற்­சங்கம் வேலை­நி­றுத்த போராட்­டத்தில் ஈடுப்­பட போவ­தாக அறி­வித்­துள்­ளனர். இந்த போராட்­டத்­தினை ரயில்வே பொறி­யியல் சார­திகள், பொறுப்­ப­தி­கா­ரிகள் ஒன்­றி­ணைந்த தொழி­ற­சங்­கமே போராட்­டத்தில் ஈடுப்­ப­டு­வ­தற்கு முடி­வெ­டுத்­துள்­ளது.

சம்­பள கட்­ட­மைப்பின் எம்.பி 1 மற்றும் 2 கட்­ட­மைப்பில் திருத்தம் செய்து சம்­ப­ளத்தை அதி­க­ரிக்க வேண்டும் என்­பதே இவர்­க­ளது கோரிக்­கை­யாகும். இதன்­படி அமைச்சின் செய­லா­ள­ருடன் பேசி­ய­துடன் பிர­த­மரின் செய­லா­ள­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்­தினர். இந்த பேச்­சு­வார்த்­தை­யின்­படி பிர­த­மரின் செய­லாளர் கோரிக்­கைக்கு இணக்கம் தெரி­வித்து, சம்­பள மற்றம் கார்டர் ஆணைக்­கு­ழு­வுக்கு கடிதம் அனுப்­பி­னாலும் அந்த கடி­தத்தை ஆணைக்­குழு நிரா­க­ரித்­தது.

ஏனெனில் குறித்த சம்­பள அதி­க­ரிப்பை ரயில் வே திணைக்­கள ஊழி­யர்­க­ளுக்கு வழங்­கினால் சுகா­தார ஊழி­யர்­களும் மறு­தினம் வேலை­நி­றுத்த போராட்­டத்தில் குதிப்பர். ஆகையால் இதனை எம்மால் செயற்­ப­டுத்த முடி­யாது என கூறி­யுள்­ளனர்.

ஆகவே தொழிற்­சங்­க­களின் கோரிக்கை அநீ­தி­யாகும். அத்­துடன் இது தொழிற்­சங்­கங்­க­ளுக்­கி­டை­யி­லான போராட்­ட­மாகும். இதனால் பாதிக்­கப்­பட போவது மக்­க­ளே­யாகும். எனவே நாட்டு மக்­களை மதித்து செயற்­பட வேண்டும். மக்­க­ளுக்­கான சேவைக்கு எந்­த­வொரு பாதிப்பு ஏற்­பட கூடாது.

அண்­மையில் முன்­னெ­டுக்­கப்­பட்ட ஒரு நாள் ரயில்வே ஊழி­யர்­களின் வேலை­நி­றுத்தம் கார­ண­மாக 17 மில்­லியன் ரூபா நட்டம் ஏற்­பட்­டது. அத்­துடன் ரயில்வே திணைக்­களம் வரு­டாந்தம் 6000 மில்­லியன் ரூபா நட்­டத்தில் இயங்கி கொண்­டி­ருக்­கின்­றது. எனவே தொழிற்­சங்­கங்கள் ரயில்வே வேலை­நி­றுத்தம் செய்து மக்­க­ளுக்­கான சேவையை முடக்க கூடாது. ஊழி­யர்­களின் கோரிக்கை அநீ­தி­யாகும். ஆகையால் ரயில்வே வேலை­நி­றுத்த போராட்டத்தை நடத்த கூடாது.

மக்களுக்கு சேவையை தொடர்ந்து பாதிப்புற செய்தால் மக்களுக்கே சட்டத்தை கையில் எடுக்க நேரிடும். அப்படியாயின் அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே இது தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்றார்.

Leave a comment