ஆணைக்குழுக்கள் ஜனநாயக வழியில் செயற்படுகின்றனவா?

332 0

சன­நா­ய­கத்­தின் ஒரு அங்­க­மாக சுயா­தீன அதி­கா­ரி­கள் நிய­ம­ன­மும், சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­கள் நிய­ம­ன­மும், செயற்­பா­டு­டை­ய­தாக விளங்­கு­கின்­றன.

அர­ச­மைப்­பில் சில முக்­கிய அதி­கா­ரி­களை அரச தலை­வர் நிய­மிப்­பது தொடர்­பா­க­வும், சம்­ப­ளம் மற்­றும் குறித்த பத­வி­க­ளுக்­குத் தேவை­யான அடிப்­படை அம்­சங்­கள் குறித்­தும் உறுப்பு­ரை­யில் காண­லாம்.

குறிப்­பாக நாடா­ளு­மன்ற செய­லா­ளர் நாய­கம், கணக்­காய்­வா­ளர் தலை­மை­ய­தி­பதி, சட்­டமா அதி­பர், தேர்­தல் ஆணை­யா­ளர், தலைமை நீதி­பதி போன்ற சுயா­தீ­ன­மாக இயங்­கும் உயர் அதி­கா­ரி­க­ளின் நிய­ம­னங் கள் அர­ச­மைப்­பில் விதைந்­து­ரைக் கப்பட்­ட­வாறு அரச தலை­வ­ரால் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

அர­ச­மைப்­புக்­கான 19ஆவது 
திருத்­தத்­தின் படி­யான
அதி­கா­ரக் கட்­டுப்­பாடு

ஆனால் அண்­மை­யில் நிறை­வேற்­றப்­பட்ட அர­சமைப்­புக்­கான 19ஆவது திருத்­தத்தின்படி ஏற்­க­னவே உரு­வாக்கப்­பட்ட அர­ச­மைப்­புச் சபை­யின் பரிந்­து­ரை­யைப் பெற்றே அரச தலை­வர் குறித்த நிய­ம­னங்­களை மேற்­கொள்ள வேண்­டு­மென திருத்­தப் பட்­டுள்­ளது.

சில அதி­கா­ரி­க­ளின் நிய­ம­ன­ங்கள் தவிர, ஏனையவை சில அதி­கா­ரி­க­ளின் தலை­மை­யில் ஒரு குழு­வும், அந்த குழு உறுப்­பி­னர்­க­ளைச் சபா­நா­ய­கர், தலைமை அமைச்­சர், எதிர்க்­கட்சி தலை­வர், சிறு­பான்மை அர­சி­யல் கட்­சி­க­ளின் பிர­தி­நி­தி­யொ­ரு­வர் எனச் சேர்ந்து சுயா­தீன ஆணைக்­கு­ழு­வாக நிய­மிப்­பார்­கள்.

சட்­டமா அதி­ப­ராக அந்­தத் திணைக்­க­ளத்­தின் மூத்த சட்­ட­வா­தி­யாக உள்­ள­வ­ரையே அரச தலை­வர் நிய­மிப்­பது வழக்­க­மா­ன­தொன்று.

சட்­டமா அதி­ப­ரின் தொழிற்­பாடு அரச தலை­வ­ருக்­கும் தலைமை அமைச்­ச­ருக்­கும் சட்ட ஆலோ­சனை வழங்­கு­வ­தா­கும்.

அத்­தோடு குற்­ற­வி­யல் வழக்­கு­களை மேல் நீதி­மன்­றில் தொடுப்­ப­தற்­குத் தேவை­யான குற்­றப்­பத் தி­ரிகை வழக்­குப் பிராது ஆகி­ய­வற்றை தயா­ரித்­த­லும் மேல் நீதி­மன்­றில் வழக்­கு­களை நடத்­து­வ­து­மா­கும்.

சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­கள்
அர­சி­யல் தலை­யீ­டு­க­ளின்றி 
செயற்­பட வாய்ப்பு

சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களை அமைப்­ப­தும், அவை அர­சி­யல் தலை­யீ­டு­க­ளின்றி சுயா­தீ­ன­மாக செயற்பட்டு வரு­கின்­றமையும் ஒரு சிறந்த சன­நா­ய­கத்தை செய­லு­ரு­வாக்­கும் விட­ய­மா­கும்.

தேர்­தல் ஆணைக்­குழு, எல்லை நிர்­ணய ஆணைக்­குழு, தேசிய பொலிஸ் ஆணைக்­குழு, மனித உரிமை ஆணைக்­குழு, பல்­க­லக்­க­ழக வழங்­கல் ஆணைக்­குழு, கணக்­காய்­வா­ளர் சேவை ஆணைக்­குழு, நிதி ஆணைக்­குழு, பகி­ரங்க சேவை ஆணைக்­குழு, நீதிச் சேவை ஆணைக்­குழு, இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்­குழு போன்ற ஆணைக்­கு­ழுக்­கள் சன­நா­யக அடிப்­ப­டை­யில் எவ­ரது தலை­யீ­டு­க­ளு­மின்­றிச் சுயா­தீ­ன­ மாக இயங்­கும் நோக்­கம் கொண்­டவை.

இவ்­வாறு சுயா­தீ­ன­மா­கச் செயற்­ப­டு­வ­தற்­கான அதி­கா­ரத்தை வழங்்­கி­யும் வேறு தரப்­பு­க­ளது தலை­யி­டாத் தன்மை உறு­திப்­ப­டுத்­திய போதி­லும், அர­ச­மைப்­புக்கு அமைய அதி­கா­ரி­கள் அல்­லது ஆணைக்­கு­ழுக்­கள் நாட்­டின் பிர­சை­க­ளின் தேவை­களை அல்­லது பிரச்­சி­னை­களை ஊன்றி அலசி ஆராய்ந்து முடிவு எடுக்­காது, நேர்­மை­யற்ற, சன­நா­யக ரீதி­யற்ற விதத்­தில் தீர்­மானங் கள் மேற்­கொள்­ளும்போது அவற்றை எவ்­வாறு நேர் சீர் செய்­வது என்­ப­தில் தெளி­வற்ற தன்­மையே காணப்­ப­டு­கின்­றது.

வேலியே பயிரை மேய்­வ­தற்­கொப்ப, சன­நா­ய­கத்­தைக் கட்­டிக் காக்க வேண்­டிய ஒரு­வர், சன­நா­ய­கத்­துக்கு முரண்­பட்ட வகை­யில் செயற்­பட்­டால் எவ்­வாறு நாடு முன்­னே­றும் என விச­னம் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அரச தலை­வர் கூடத் தலை­யிட முடி­யா­த­போது அர­ச­மைப்­பி­னால் நிய­மிக்­கப்­பட்ட அந்த அதி­கா­ரி­யின் குறித்த முடிவை மாற்ற வைப்­ப­தற்கு என்ன வழி என்­ப­தில் சட்­டம் மௌனிக்கின்றது.

வழக்­கின் சாட்­சி­கள் 
நீதி­மன்­றில் முன்­னி­லை­யா­வது
குறித்து விதண்­டா­வா­தக் 
கருத்து

தமிழ்­பே­சும் எதி­ரி­க­ளுக்கு எதி­ரான வழக்கு, தமிழ்ச் சட்­டத்­த­ர­ணி­கள் வாதா­டும் வழக்கு, தமி­ழில் விசா­ரிக்­கப்­ப­டக்­கூ­டிய சூழ்­நி­லை­யில்,

சாட்­சி­கள் வவு­னியா நீதி­மன்­றில் முன்­னி­லை­யா­வ­தற்கு அச்­சப்­ப­டு­கின்­ற­னர் என்ற ஒரு விதண்டா வாதக் கருத்தை மட்­டும் கூறி நீதி­மன்ற விசா­ர­ணையை சிங்­களப் பகுதி நீதி­மன்­றுக்கு மாற்­று­வது நீதிக்­குப் புறம்­பான செயல் என்­பது வெளிப்­படை.

எதி­ரி­க­ளின் சட்­டத்­த­ர­ணி­கள் சிங்­கள மொழி­யில் பரிச்­ச­ய­மற்­ற­வர்­க­ளாக இருப்­ப­தி­னால் சிங்­கள மொழி சட்­டத்­த­ர­ணி­களை நாடி அவர்­களை முன்­னி­லை­யாக வைப்­ப­தற்­கும்,

அவர்­க­ளுக்கு வழக்­குக் குறித்த தெளி­வைப் பெற்­றுக் கொள்ள வைக்­க­வும் காலம் எடுக்­கும் என்­ப­தை­யும் தாண்டி அனு­ரா­தபு­ரத்­தில் எதி­ரி­க­ளின் குடும்­பத்­தி­னர் மற்­றும் தமிழ் பேசும் சட்­டத்­த­ர­ணி­கள் தங்­கி­யி­ருந்து வழக்கை நடத்­து­வது பெரும் பிரச்­சி­னை­யா­ன­ தொன்று.

அதை விட அரசு சாட்­சி­க­ளுக்­குத் தேவை­யான பாது­காப்பை வழங்கி வவு­னியா நீதி­மன்­றில் வழக்கை விசா­ரிக்க வைப்­ப­தில் என்ன தடை­கள் இருக்­கின்­றன என்­ப­தில் விளக்­க­மில்லை.

இவற்­றில் எதை சன­நா­யக செயற்­பா­டா­கக் கொள்­வது?

இத்­தனை வரு­டங்­க­ளாக, குறித்த வழக்கு வவு­னியா நீதி­மன்­றில் விசா­ரிக்­கப்­பட்­ட­போது நீதி­மன்­றில் முன்­னி­லை­யா­கி­யி­ருந்த சாட்­சி­க­ளுக்கு, குறித்த வழக்கை மூன்று நாள்­க­ளுக்கு தொடர்ச்­சி­யாக விசா­ரிக்க உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ள இந்­தத் தரு­ணத்­தில்,

இவ்­வா­றாக விசா­ர­ணைக்­காக நீதி­மன்­றத்தை மாற்­று­வ­தன் மூலம் இலங்­கை­யில் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கம் உரு­வா­வதை விரும்­பாத சில சக்­தி­கள் செயற்­ப­டு­கின்­றன என்ற உண்மை புல­னா­கி­றது.

உள்­நாட்டு சிங்­கள நீதி­ப­தி­க­ளின் விசா­ர­ணை­யில் தமிழ் மக்­க­ளுக்கு நம்­பிக்­கை­யற்ற நிலைமை வலுப்­பெ­று­கின்­றது.

Leave a comment