கத்தோலிக்க குருமார்களின் ஒய்வு விடுதி இன்று திறந்து வைக்கப்பட்டது!

286 0

யாழ்-வளளாய்ப் பகுதியில் அமைக்கப்பட்ட கத்தோலிக்க குருமார்களின் ஒய்வு விடுதி இன்று காலை யாழ் மாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையினால்
திறந்து வைக்கப்பட்டது.

யாழ் ஆயர், வடக்கு கடற்படை தளபதியிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த இல்லம் கடற்படையின் பொறியில் பிரிவினரின் மனிதவலுவுடன் ஆயர் இல்லம் ஒதுக்கீடு செய்த 15 மில்லியன் ரூபா நிதியில் மறு சீரமைப்பச்செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிகழ்வில் இலங்கைக் கடற்படைத் தளபதி ட்ராவிஸ் சின்னையா, வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி றியர் அட்மிரல்ஜெயந்த.டி.சில்வா, கடற்படைஅதிகாரிகள், மற்றும் அருட் தந்தையர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Leave a comment