விசர் நாய் கடித்த சிறுவன் பலி!

327 0

விசர் நாய் கடித்த சிறுவன், விசர் நோய்த் தொற்று ஏற்பட்டு பிரான்ஸில் உயிரிழந்தான் எனத் தெரியவருகிறது.

பிரான்ஸிலிருந்து விடுமுறைக்காக இலங்கைக்கு வந்த சிறுவன், திக்வெலக் கடற்கரைக்குச் சென்றிருந்த போது, விசர் நாய் கடித்தது என்று கூறப்படுகிறது.

மீண்டும் பிரான்ஸுக்குச் சென்ற சிறுவன் திடீர் சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிறுவனின் குருதி மாதிரியைப் பரிசோதனை செய்த மருத்துவர், ரேபிஸ் நோய் என்ற விசர் நோய்த் தொற்று சிறுவனுக்கு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதும், அது பலனின்றி நேற்று உயிரிழந்தான் என்று தெரிவிக்கப்பட்டது.

Leave a comment