தமி­ழர்கள் குடி­கா­ரர்களென வர்­ணித்த பிரதி அமைச்சர் அமீர் அலிக்கு ரெலோ கண்­டனம்

345 0

மட்­டக்­க­ளப்பில் கடந்த புதன்­கி­ழமை நடை­பெற்ற நிகழ்­வொன்றில் உரை­யா ற்­றிய பிரதி அமைச்சர் அமீர் அலி, கிழக்கு தமி­ழர்கள் அதிக பணத்தை மதுவுக்கா­க வும்,முஸ்­லிம்கள் அதிகபணத்தை கல்­விக்­கா­கவும் செலவ­ழிக்­கின்­றார்கள் என சனிக்­கி­ழமை தேசிய பத்திரிகையொன்றில் வெளிவந்த செய்தியை சுட்­டிக்காட்டி அமைச்சர் தமிழ் மக்­களிடம் இக் கூற்­றுக்­காக மன்­னிப்பு கோர வேண்டும் என தமிழ் ஈழவிடு­தலை இயக்­கத்தின் (ரெலோ) நிர்வாகச்செய­லாளர் நித்தி மாஸ்டர் தெரி­வித்தார்.

முஸ்லிம் கிரா­மங்­களை அண்­டிய தமிழ் பகு­தி­களில் இருக்கும் மது­பான சாலை­களில் இரவு 06 மணி­முதல் 08 மணி­வரை யார் அதிகம் சாராயம் வாங்­கு­கின்­றார்கள் என்­பதை பிரதி அமைச்சர் அமீர் அலி நின்று பார்த்­தி­ருந்தால் இக் கூற்றை அவர் மாறி கூறி­யி­ருக்க வேண்டும். குறிப்­பாக காரை­தீவு,  களு­வாஞ்­சிக்­குடி, ஆரை­யம்­பதி, செங்­க­லடி போன்ற பகு­தி­களில் இருக்கும் மது­பான சாலை­களில் விற்­பனை அமோ­க­மாக நடை பெறு­வது யாரால் என்­பது அமைச்­ச­ருக்கு தெரி­யாது எனநினைக்­கிறேன்.

தமிழ் மக்­க­ளுக்கு இருக்கும் ஒரே சொத்து கல்வி. எவ்­வ­ளவு கஷ்­டப்­பட்­டாலும் தனது பிள்­ளை­க­ளுக்கு கல்­வியை ஊட்­டு­வதில் தமி­ழர்கள் பின் நிற்­ப­தில்லை. அதற்­காக அவர்கள் எவ்­வ­ளவு பணத்தை விட்­டெ­றிந்து செல­வ­ழிக்க தயாராக உள்­ளனர். தமி­ழர்கள் பிள்­ளை­களை இடை

நடுவில் வியா­பாரம் செய்ய அனுப்­பு­வ­தில்லை.

எதற்கெடுத்­தாலும் அண்­மைக்­கா­லமாக தமிழ் மக்கள் கிள்ளுக் கீரைகள் என நினைத்து சில கிழக்கு அர­சியல் வாதிகள் எதை எதையோ எல்லாம் கூறும் அள­வுக்கு அவர்­களின் இனத்­து­வேஷம் அதி­க­ரித்­துள்­ளது.

அண்­மையில் கூட முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்­பினர் சிப்லி பாறுக்  கல்­கு­டாவில் நடை பெற்ற நிகழ் வொன்­றிலே கிழக்கு மாகாண அதி­காரம் தமிழர் கைகளில் சென்று விட்டால் முஸ்லிம் மக்கள் தமி­ழர்­க­ளுக்கு அடி­மை­யாக இருக்க வேண்டும் என குறிப்­பிட்­டி­ருந்தார். இதற்கு ரெலோ தனது வன்­மை­யான கண்­ட­னத்தை தெரி­வித்து இருந்­தது.

இன்று பிரதி அமைச்சர் அமீர் அலியின் பிர­தே­சத்தில் உள்ள கல்­கு­டாவில் மது­பான உற்­பத்தி நிலை­யமே அமைக்­கப்­பட்டு வரு­கி­றது. அதனை தடுத்து நிறுத்த முடி­யாத நிலையில் முஸ்லிம் அர­சியல் வாதிகள் உள்­ளார்கள்.

எனவே அமைச்சர் தெரிவித்த இக் கூற்றுக்கு கிழக்கு மாகாண தமிழர்களிடம் அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் ரெலோவின் நிர்வாக செயலாளர் நித்தி மாஸ்டர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment