இலங்கையை வந்தடைந்தது இந்தோனேசிய போர்க் கப்பல்

244 0

இந்தோனேசியக் கடற்படையின் இலகு ரக பலநோக்குப் போர்க்கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்துக்கு நல்லெண்ணப் பயணமாக வந்தடைந்துள்ளது.

நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த இந்தக் கப்பல், மூன்று நாட்கள் தரித்திருக்கும் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கே.ஆர்.ஐ பங் ரோமோ என்ற இந்தப் போர்க்கப்பலில், 107 இந்தோனேசியக் கடற்படை மாலுமிகள் பணியாற்றுகின்றனர்.

கொழும்புத் துறைமுகத்தின் தரித்து நிற்கும் போது, இலங்கை கடற்படையினருடன் இணைந்து, இந்தோனேசியக் கடற்படையினர் பயிற்சிகளிலும் நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளனர்.

Leave a comment