நாடு திரும்பினார் கோட்டாபய ராஜபக்‌ஷ

9269 0

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ சற்றுமுன்னர் நாட்டை வந்தடைந்துள்ளார். 

எவ்வாறாயினும் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவர் கைது செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பும் அவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிய வந்திருந்தது.

எவ்வாறாயினும் இன்று காலை நாட்டை வந்தடைந்ததாகவும், எனினும் அவர் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த அரசாங்க காலத்தில் மெதமுலன பிரதேசத்தில் டீ.ஏ. ராஜபக்‌ஷ அருங்காட்சியகம் மற்றும் நினைவகம் அமைக்கப்பட்ட போது அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட உள்ளார்.

இந்த திட்டத்தின் போது, இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சுமார் 90 மில்லியன் ரூபா நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர், கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட சம்பந்தப்பட சில தரப்பினரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment