பௌத்த தேரர் முறைப்­பாடு ; அழைப்பாணையை நிராகரித்தார் சிவாஜிலிங்கம்

13553 0

பௌத்த தேரர் ஒரு­வரால் மேற்­கொள்­ளப்­பட்ட முறைப்­பாடு தொடர்­பாக வாக்­கு­மூலம் பதிவு செய்­வ­தற்கு குற்றப் புல­னாய்வு பிரி­வி­னரால் விடுக்­கப்­பட்ட அழைப்­பாணையை வட­மா­காண சபை உறுப்­பினர் எம்.கே.சிவா­ஜி­லிங்கம் நிரா­க­ரித்­துள்ளார்.

இச் சம்­பவம் தொடர்­பாக தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

வட­மா­காண சபை உறுப்­பி­னர் எம்.கே. சிவா­ஜி­லிங்­கத்­திற்கு எதிராக பௌத்த தேரர் ஒருவர் குற்றப் புல­னாய்வு பிரிவில் முறைப்­பா­டொன்றை மேற்­கொண்­டி­ருந்தார்.

இத­னை­ய­டுத்து இம் முறைப்­பாடு தொடர்­பாக வாக்கு மூலம் ஒன்­றினை   பெற்­றுக்­கொள்­வ­தற்­காக நேற்­றைய தினம் கொழும்பு குற்றப் புல­னாய்வு பிரிவில் ஆஜரா­கு­மாறு வட­மா­காண சபை உறுப்­பி­ன­ருக்கு குற்றப் புல­னாய்வு பிரிவில் இருந்து அழைப்­புக்­கி­டைத்­தி­ருந்­தது.

எனினும் தமக்கு உடல் உபா­தைகள் உள்­ள­மை­யினால் தினம் தினம் கொழும்­புக்கு பயணம் செய்து வர­மு­டி­யாது என்றும் அவ்­வாறு வாக்­கு­மூ­லத்தை பெற்­றுக்­கொள்ள விரும்­பினால் யாழ்ப்­பா­ணத்­திற்கு வந்து வாக்­கு­மூ­லத்தை பெற்­றுக்­கொள்­ளுங்கள் என்றும் அவர் குற்றப் புல­னாய்வு பிரி­வி­ன­ருக்கு தெரி­வித்­துள்ளார்.

Leave a comment