ஆறு நாடு­களின் 9 போர் கப்பல்கள் இலங்கை விஜயம்.!

1654 0

அடுத்த மாதம் நடுப்­ப­குதி வரை­யி­லான காலப்­ப­கு­தியில் ஆறு நாடு­களின் ஒன்­பது போர்க் கப்­பல்கள் இலங்­கைக்கு வரு­கின்­றன. இந்த விஜ­யங்­க­ளின்­போது இலங்கை கடற்­ப­டை­யுடன் பல்­வேறு கூட்டு ஆயு­தப்­ப­யிற்­சி­களும்  முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன.  

கடந்த காலங்­களில் தொடர்ச்­சி­யாக சர்­வ­தேச நாடு­களின் போர்க்­கப்­பல்கள் இலங்கை நோக்கி விஜயம் மேற்­கொண்­டி­ருந்த  நிலையில் அண்­மைக்­கா­ல­மாக இலங்கை நோக்­கிய எந்த விஜ­யமும் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.

எனினும் அடுத்த மாதம் பத்தாம் திகதி வரை­யி­லான காலப்­ப­டு­தியில் ஆறு நாடு­களை சேர்ந்த ஒன்­பது போர்க்­கப்­பல்கள் இலங்­கைக்கு வரு­கின்­றன. அதன் அடிப்­ப­டையில் இந்­தோ­னே­சிய கடற்­ப­டையின் போர்க்­கப்பல் இன்று இலங்­கையை வந்­த­டையும் நிலையில் எதிர்­வரும் 23ஆம் திகதி பங்­க­ளாதேஷ் கடற்­ப­டையின் போர்க்­கப்பல் ஒன்றும் 26ஆம் திகதி தென்­கொ­ரி­யாவின் இரண்டு போர்க்­கப்­பல்­களும் இலங்கை வரும்.

நவம்பர் மாதம் 2ஆம் திகதி இந்­தி­யாவின் இரண்டு போர்க்­கப்­பல்­களும், நவம்பர் மாதம் 4ஆம் திகதி இந்­தோ­னே­சி­யாவின் போர்க்­கப்பல் ஒன்றும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி பாகிஸ்தான் போர்க்­கப்பல் ஒன்றும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி சீன போர்க்­கப்பல் ஒன்றும் இலங்­கைக்கு விஜயம் செய்­கின்­றன.

குறித்த கப்­பல்கள் வெவ்­வேறு காலத்தில் விஜயம் செய்­கின்ற நிலையில் இலங்­கையில் நங்­கூ­ர­மி­டப்­பட்­டுள்ள காலப்­ப­கு­தியில் இலங்கை கடற்படையுடன் இணைந்து கூட்டு  ஆயுத பயிற்சிகளையும்   முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை கடற்படை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

Leave a comment