பிணை முறி விவகாரம் – பதவி துறக்க தயார் – அமைச்சர் மகிந்த அமரவீர

517 0

சர்ச்சைக்குரிய பிணைமுறி சம்பவம் தொடர்பில் ஆராயும் பொருட்டு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை நீதிமன்றத்திற்கு கொண்டுச் செல்ல தாம் தயார் என சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள அவரது உத்தியோக பூர்வ இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன் பொருட்டு தாம் தமது அமைச்சு பதவியை துறப்பதற்கும் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிணை முறி தொடர்பான விடயங்களை முதலில் தெரியப்படுத்தியது தாமே.

அதனை ஆணைக்குழுவிற்கு கொண்டுச் சென்றதும் தாமே.

இந்தநிலையில் அதன் உண்மையை நிலையை வெளிப்படுத்த அதனை நீதிமன்றத்திற்கும் கொண்டுச் செல்லவும் தயார்.

அதற்கு அமைச்சு பதவி தடையாக இருக்குமாயின் அதனையும் துறக்க தயார் எனவும் அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment