காணாமல் போயிருந்த மூன்று யுவதிகளில் இருவர் வெல்லம்பிட்டி காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
இவ்வாறு இன்று முற்பகல் சரணடைந்தவர்கள் 19 மற்றும் 15 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
கொலன்னாவ சாலமுல்ல பகுதியைச் சேர்ந்த 3 யுவதிகள் கொழும்பு – கிரேண்பாஸ் பகுதியில் வைத்து கடந்த சனிக்கிழமை காணாமல் போயினர்.
இந்த சம்பவம் தொடர்பில் கிரேண்பாஸ் மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய காவற்துறை நிலையங்களின் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இந்தநிலையில் இன்று முற்பகல் காணாமல் போனதாக கூறப்பட்ட இருவர் வெல்லம்பிட்டி காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
எனினும் காணாமல் போன 14 வயது சிறுமி குறித்து இதுவரையில் எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.