தாய்வான் வங்கி கொள்ளை – மற்றுமொரு இலங்கையர் கைது

314 0

தாய்வானின் வங்கி ஒன்றில் இணையவழியாக ஊடுருவி கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இலங்கையில் மற்றுமொருவர் கைதாகியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஏலவே கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சலீல முனசிங்கவின் உறவினரான குட்டியாராச்சி சூலாபால டி சில்வா என்பவரே இன்று கைதாகியுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த வங்கியில் இணையவழியாக ஊடுருவி, பெருந்தொகையான பணம் ஏனைய நாடுகளில் உள்ள வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டநிலையில், இலங்கையில் சலீல முனசிங்கவின் கணக்கிற்கு 1.1 மில்லியன் டொலர்கள் மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment