ஆப்கான் காவற்துறை பயிற்சி நிலையம் மீது பயங்கரவாத தாக்குதல் – 12 பேர் பலி

353 0

கிழக்கு ஆப்கானிஸ்தான் கார்டெஸ்ஸில் (Gardez) உள்ள காவற்துறை பயிற்சி நிலையம் ஒன்றின் மீது தற்கொலை குண்டு மற்றும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 12 பேர் வரை பலியானதாக ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

சுமார் 70 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் தற்கொலை குண்டுகள் நிரப்பப்பட்ட சிற்றூர்ந்து வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.

பின்னர் காவற்துறை பயிற்சி மையத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு தாலிபான் அமைப்பு உரிமை கோரியுள்ளது.

 

Leave a comment