கேரள கஞ்சா – மன்னாரிலும் திருகோணமலையிலும் பலர் கைது

225 0

மன்னாரில் இருந்து – தம்பலகாமம் பிரதேசத்திற்கு கேரள கஞ்சாவை கடத்திச் செல்ல முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டியில் 6 கிலோ கேரள கஞ்சா கடத்திச் செல்லப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 4.30 அளவில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக மொறவௌ காவல்துறையின் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தம்பலகாமம் – புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்களை இன்று திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே, கெக்கிராவ பிரதேசத்தில் கேளர கஞ்சாவுடன் 8 இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு இவர்கள் கைது செய்யப்பட்;டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்களிடம் இருந்து பொதிசெய்யப்பட்ட நிலையில் இருந்த கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் கெக்கிராவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment