காணியொன்றில் கைக்குண்டுகள் மற்றும் தோட்டாக்கள் மீட்பு

2196 0

அம்பாறை , வீரகொட பிரதேசத்தின் தனியார் காணியொன்றில் இருந்து கைக்குண்டுகள் மூன்றும் மற்றும் தோட்டாக்கள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த காணி உரிமையாளர் இன்று குறித்த பகுதியினை சுத்தம் செய்த போது இந்த கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

குறித்த கைக்குண்டுகளை செயலிழக்கச் செய்வதற்காக காவற்துறை அதிரடிப்படையினருக்கு ஒப்படைக்க காவற்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Leave a comment