வடக்கு முதல்வரின் சொற்படி செயற்படுங்கள்- அங்கஜன்

Posted by - December 22, 2017

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டதைப் போன்று, கட்சிகளை பார்க்காமல் நல்ல மனிதர்களுக்கு வாக்களியுங்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் கோரியுள்ளார். யாழ். மாவட்டத்தில் 16 உள்ளூராட்சி மன்றங்களுக்கு நேற்று (வியாழக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார். வரலாற்றில் முதல்தடவையாக யாழ். மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் இம்முறை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிடுகின்றது. அந்தவகையில் இதுவே தமக்கு கிடைத்த பாரிய

அழிந்துபோன தேசத்தை கட்டியெழுப்ப உதவுங்கள்- மாவை

Posted by - December 22, 2017

போரில் அழிந்துபோன தேசத்தையும் சிதைந்துபோன மக்களையும் மீள கட்டியெழுப்ப உள்ளூராட்சி மன்றங்களின் பங்களிப்பு அவசியம். அதற்கு, எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டம் முழுவதிலுமுள்ள உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தமிழரசுக் கட்சி தாக்கல் செய்தது. மாவை சேனாதிராஜா தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈஸ்வரபாதம்

யாழில் 4 வயது பிள்ளையை கொலை செய்த பின்னர் , தாயும் தூக்கிட்டு தற்கொலை

Posted by - December 22, 2017

யாழ்.அராலி பகுதியில் தாயொருவர் தனது நான்கு வயது பிள்ளையை தூக்கிட்டு கொலை செய்த பின்னர் , தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அராலி பகுதியில் நேற்று இந்த பரிதாப சம்பவம் இடம்பெற்று உள்ளது. அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , அராலி பகுதியில் வசிக்கும் 26 வயதான மூன்று பிள்ளைகளின் தாயாருக்கும் அவரது கணவருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் நிலவி வந்துள்ளது. அந்நிலையில் நேற்று வியாழக்கிழமை தனது பிள்ளைகளை தூக்கிட்ட பின்னர் தானும் தற்கொலை செய்து

மர்மமான முறையில் இளம் குடும்பஸ்தர் மரணம் : வவுனியாவில் சம்பவம்

Posted by - December 22, 2017

வவுனியா, மருக்காரம்பளை கணேசபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்தரொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 24 வயதுடைய சிவகுமார் கஜந்தன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு மர்மமாக மரணமடைந்தவராவார். சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, நேற்றிரவு 8.30 மணியளவில் தனது வீட்டில் திடீரென தன் தந்தையை அழைத்து தான் விஷம் அருந்தியுள்ளதாக கூறியதையடுத்து உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதித்தது சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். மரணம் தொடர்பான மேலதிக

ஒருமித்த முற்போக்கு கூட்டணி ஏணி சின்னத்தில் 14 சபைகளில் தனித்து போட்டி

Posted by - December 22, 2017

தமிழ் முற்போக்கு கூட்டணி, ஒருமித்த முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் ஏணி சின்னத்தில் தனித்து மாவட்டவாரியாக, பின்வரும் பதினான்கு சபைகளில் போட்டியிடுகின்றது. கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு மாநகரசபையிலும், இரத்தினபுரி மாவட்டத்தில் பலாங்கொடை பிரதேச சபையிலும் இம்புல்பே பிரதேச சபையிலும் கொடக்கவெல பிரதேச சபையிலும் போட்டியிடுகின்றது. இதேவேளை, மாத்தளை மாவட்டத்தில் மாத்தளை மாநகரசபையிலும் மாத்தளை பிரதேச சபையிலும் இறத்தோட்டை பிரதேச சபையிலும் போட்டியிடுகின்றது. கண்டி மாவட்டத்தில் கண்டி மாநகரசபையிலும் நாவலப்பிட்டி நகரசபையிலும் கம்பளை நகரசபையிலும் பன்வில பிரதேச சபையிலும்

கறுப்பு நிறமாக மாறிய கெசல்கமுவ ஒயா ஆற்று நீர்!!!

Posted by - December 22, 2017

காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் பொகவந்தலாவ, கெசல்கமுவ ஒயாவின் நீர் கறுப்பு நிறமாக மாறியமை தொடர்பில் பொகவந்தலாவ  பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர். இன்று விடியற் காலையில் கெசல்கமுவ ஒயா ஆற்று நீர் கறுப்பு  நிறத்தில் செல்வதை அவதானித்த பிரதேசமக்கள் பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியமை தொடர்பில் குறித்த கெசல்கமுவ ஒயா ஆற்றின் நீரில் என்ன கலக்கபட்டது என்பதினை கண்டறிவதற்கு பொகவந்தலாவ பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர். தேயிலை தொழிற்சாலையில் உள்ள கழிவு நீரினை கெசல்கமுவ ஒயா ஆற்றில்

பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும தாமரைக்கு தாவினார்?

Posted by - December 22, 2017

கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவை இலக்கு வைத்து பேஸ்புக் ஊடாக போலி பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ‘ஸ்ரீ லங்க பிரிட்ஜ்’ என்ற பெயரில் பேஸ்புக் பக்கத்தில் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும பொதுஜன பெரமுன கட்சிக்கு தாவினார் என்ற செய்தி நேற்று பரப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர் கத்துத் தெரிவிக்கையில், களுத்துரை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி தொடர்பில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு அங்கிருந்து நேரடியாக களுத்துரை விஹாரைக்கு சென்றிருந்தேன். அங்கு ரோஹித அபேகுணவர்தன

ஐ.நா பிரேரணையை நிறைவேற்றுவதில் மந்தகதி- மன்னிப்புச் சபை

Posted by - December 22, 2017

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றிய 30/1 தீர்மானத்தை நிறைவேற்றும் நடவடிக்கைகள் மந்தகதியிலேயே இடம்பெறுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சாட்டியுள்ளது. உண்மையைக் கண்டறிதல் மற்றும் பலவந்த கடத்தல்கள் தொடர்பான குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் போன்ற விடயங்களில் தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மிகவும் மெதுவாகவே முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த சைப இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்களின்

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் இறுதி தினம் இன்று

Posted by - December 22, 2017

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது. இன்றைய தினத்திற்கு பின்னர் எந்தவொரு காரணத்திற்காகவும் தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை எற்பதில்லை என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான நபர்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உறுதிப்படுத்தும் அதிகாரியிடம் இன்றைய தினத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரிகளினால் குறித்த விண்ணப்பங்கள் உடனடியாக உறுதிப்படுத்தப்பட்டு தேர்தல் தொகுதி தெரிவத்தாட்சி அலுவலகரிடம்

யாழில்.விகாராதிபதியின் உடலை தகனம் செய்ய எதிர்ப்பு

Posted by - December 22, 2017

யாழ். நாக விகாரை விகாராதிபதியின் உடலை யாழ்.முற்றவெளி பகுதியில் அமைந்துள்ள தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதிக்கு அருகில் தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அதற்கான ஏற்பாடுகளை யாழ்.மாவட்ட இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். யாழ்.நாக விகாரை விகாராதிபதி ஞானரத்ன தேரர் சுகவீனம் காரணமாக கொழும்பு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , கடந்த செவ்வாய்க்கிழமை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். அவரது உடலம் உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பணத்திற்கு கொண்டு