வவுனியா மேல் நீதிமன்றத்தினால் மூவருக்கு மரணதண்டனை

Posted by - November 2, 2017

வவுனியாவில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2005ம் ஆண்டு ஜூலை 19ம் திகதி செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த மொஹமட் துவான் என்பவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலேயே, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் இந்த தீர்ப்பை அளித்துள்ளார். இதற்கமைய, செட்டிகுளத்தை சேர்ந்த ரவீந்திர ஜோதி, நேசராசா மற்றும் குமார் ஆகிய மூவரே குற்றவாளிகள் என இனங்காணப்பட்டுள்ளது. இதேவேளை, வழக்குடன் தொடர்புடைய முதலாவது சந்தேகநபர் தவிர்த்து ஏனைய

அவுஸ்திரேலிய பிரதமர் இலங்கையை வந்தடைந்தார்

Posted by - November 2, 2017

அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் இன்று காலை இலங்கையை வந்தடைந்தார். அவரின் வருகையை முன்னிட்டு கொழும்பின் பல வீதிகளில் விசேட போக்குவரத்து நடைமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. அவுஸ்திரேலிய பிரதமர் இன்று மதியம் வரை இலங்கை அரசாங்க பிரமுகர்களுடன் சந்திப்புகளை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்தநிலையில், களனி பாலம் முதல் பேஸ்லைன் வீதி, கொள்ளுப்பிட்டி, ஹோட்டன் பிளேஸ் மற்றும் காலி முகத்திடல் வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது

இன்று வவுனியா கச்சேரிக்கு முன்பாக மனிதச் சங்கிலிப் போராட்டம்!

Posted by - November 2, 2017

இன்று(2) பிற்பகல் 2.30 மணிக்கு வவுனியா கச்சேரிக்கு முன்பாக நடைபெற இருக்கும் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் பொது மக்களை கலந்து கொள்ளுமாறு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

உலகத்திற்குத் தமிழ்ச்செல்வன் பிடிகொடுக்காத இராசதந்திரி!-ச.பொட்டு

Posted by - November 2, 2017

தமிழ்ச்செல்வனைப் பற்றியும் நினைவுக்குறிப்பொன்றை எழுதவைப்பதாக காலம் கட்டளையிட்டுவிட்டது. காலத்தின் ஓட்டத்தில் மாற்றங்கள் வரும். சில மாற்றங்களை நாம் கற்பனை செய்தும் பார்ப்பதில்லை. மாற்றம் நிகழ்ந்துவிட்ட போதிலும் அந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம் கிடந்து மறுகும். அப்படிப்பட்ட மாற்றம்தான் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் மறைவு. சபையில் புன்சிரிப்பும், எம்மிடையே கலகலத்த அதிரடிச் சிரிப்புமாக உலாவந்த தமிழ்ச்செல்வன், பிரிகேடியர் தமிழ்ச்செல்வனாக வணக்கத்திற்கு உரியவனாகிவிட்டான். தமிழ்ச்செல்வனைப் பற்றி எதிலிருந்து தொடங்குவது? அவனது வீரச்சாவிற்கு முந்திய பின்மாலைப்பொழுது…, அநுராதபுர எல்லாளன் நடவடிக்கையாளர்களுக்கான

எவர் முதலமைச்சரானாலும் எதனையும் சாதிக்க முடியாது – பொ.ஐங்கரநேசன்!!

Posted by - November 1, 2017

வடக்கு மாகாணசபையின் ஆயுட்காலம் முடிவடைவதற்கு இன்னும் ஒரு வருடகாலம் இருக்கின்றது. ஆனால், இப்போதே அடுத்த முதலமைச்சருக்காக யாரை நியமிப்பது என்று பேச ஆரம்பித்து விட்டார்கள். எவரும் முதலமைச்சராகலாம். ஆனால், எவர் முதலமைச்சரானாலும், தற்போதுள்ள அரசியலமைப்பின் கீழ் பெரிதாக எதனையும் சாதித்துவிட முடியாது என்று முன்னாள் விவசாய அமைச்சரும் வடமாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். உடுப்பிட்டி வீரகத்தி விநாயகர் சனசமூக நிலையத்தின் பவளவிழாவும் புதிய கட்டிடத்திறப்பு விழாவும்  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே பொ.ஐங்கரநேசன்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – வேட்பு மனு கோரல் டிசம்பரில்

Posted by - November 1, 2017

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு கோரலை டிசம்பர் மாதம் 11ஆம் திகதிக்கும் மற்றும் 20ஆம் திகதிக்கும் இடையில் மேற்கொள்ள தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடாத்த எதிர்ப்பார்த்துள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, எதிர்வரும் ஜனவரி மாதம் உள்ளுராட்சி மன்ற தேர்தலை  நடாத்த இன்று கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹமட் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள்

மாங்குளம் வைத்தியசாலையில் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டட தொகுதி இன்று திறந்து வைப்பு

Posted by - November 1, 2017

சுதந்திர சுகாதார சேவையினை வலுப்படுத்தும் நோக்கத்தை முன்மாதிரியாக கொண்டு எய்ட்ஸ் சயரோகம் மலேரியா நோய்களை அழித்தொழிப்பதற்கான கருத்திட்ட நிதியுதவியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம் வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டட தொகுதி இன்று வைத்தியசாலையினுடைய வைத்தியரால் திறந்து வைக்கப்பட்டது

தேர்தலில் சுதந்திர கட்சியுடன் இணைந்து போட்டியிட தயார் – ராஜித

Posted by - November 1, 2017

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி என்பன பொது இலச்சினையின் கீழ் போட்டியிட தயார் என இணை அமைச்சரவை பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பேருவளை தொகுதியில் அவ்வாறு போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அகதிகளை பொறுப்பேற்குமாறு நியூசிலாந்துக்கு அழுத்தம்

Posted by - November 1, 2017

மானஸ்தீவில் நிர்கதியாகியுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அகதிகளை பொறுப்பேற்குமாறு, நியூசிலாந்து அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மானஸ்தீவு அகதிகள் முகாம் மூடப்பட்டுள்ள போதும், அங்கிருந்து 600 அகதிகள் வரையில் வெளியேற மறுத்து வருகின்றனர். எனினும் குறித்த முகாமில் இருந்து அவுஸ்திரேலியாவின் பணியாளர்கள் அனைவரும் வெளியேறி இருப்பதுடன், மின்சார இணைப்பு மற்றும் நீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் குறித்த அகதிகளை நியூசிலாந்து அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று, அந்த நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் மற்றும்

அக்காவுடன் அடிதடி; அதிகாலையில் இடம்பெற்ற பயங்கரம்!

Posted by - November 1, 2017

சகோதரியைக் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு சகோதரன் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மாவரல, பாரகமவில் இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் தற்கொலை செய்துகொண்ட அவரது இளைய சகோதரருக்கும் இடையே குடும்பப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், இன்று அதிகாலை குறித்த பெண்ணுக்கும் அவரது தம்பிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது திடீரென்று கோபத்துக்கு ஆளான தம்பி, தன்வசமிருந்த கத்தியை எடுத்து தன் சகோதரியைக் குத்தினார். இந்த எதிர்பாராத தாக்குதலில் அக்கா மரணமானார். இதைக் கண்டு