அவுஸ்திரேலிய பிரதமர் இலங்கையை வந்தடைந்தார்

344 0

அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் இன்று காலை இலங்கையை வந்தடைந்தார்.

அவரின் வருகையை முன்னிட்டு கொழும்பின் பல வீதிகளில் விசேட போக்குவரத்து நடைமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலிய பிரதமர் இன்று மதியம் வரை இலங்கை அரசாங்க பிரமுகர்களுடன் சந்திப்புகளை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்தநிலையில், களனி பாலம் முதல் பேஸ்லைன் வீதி, கொள்ளுப்பிட்டி, ஹோட்டன் பிளேஸ் மற்றும் காலி முகத்திடல் வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a comment