இன்று வவுனியா கச்சேரிக்கு முன்பாக மனிதச் சங்கிலிப் போராட்டம்!

274 0

இன்று(2) பிற்பகல் 2.30 மணிக்கு வவுனியா கச்சேரிக்கு முன்பாக நடைபெற இருக்கும் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் பொது மக்களை கலந்து கொள்ளுமாறு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அனைத்து அரசியற் கைதிகளையும் விடுதலை செய்யகோரியும் வவுனியா மேல் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்த அரசியற் கைதிகளுக்கெதிரான வழக்கை இடமாற்றியமைக்கு எதிராக அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கையை ஏற்று மீண்டும் வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கை விசாரணை செய்யகோரியும் இவ் மனித சங்கிலிப் போராட்டாம் நடைபெறவுள்ளது.
.

Leave a comment