உள்ளூராட்சி மன்ற தேர்தல் – வேட்பு மனு கோரல் டிசம்பரில்

448 0

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு கோரலை டிசம்பர் மாதம் 11ஆம் திகதிக்கும் மற்றும் 20ஆம் திகதிக்கும் இடையில் மேற்கொள்ள தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடாத்த எதிர்ப்பார்த்துள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஜனவரி மாதம் உள்ளுராட்சி மன்ற தேர்தலை  நடாத்த இன்று கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹமட் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா இன்று முற்பகல் கைச்சாத்திட்டார்.

இதற்கமைய அந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் என அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a comment