தேரருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

Posted by - January 3, 2017

நீதிமன்ற உத்தரவுக்கமைய செயற்படுமாறு பொல்ஹேன்கொட எலன் மெதினியாராம விகாராதிபதி உடுவே தம்மாலோக தேரருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் துலானி அமரசிங்க இன்று இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட மற்றும் சூழலியலாளர்கள் உள்ளிட்ட பிரதேச மக்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முறையிட்டுள்ளனர். குறித்த விகாரையில் அதிகாலை 5 மணி முதல் 6 மணிவரை ஒலிபெருக்கி பயன்படுத்தப்படுவதால் தாம் அசௌகரியத்துக்கு உள்ளாவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்க்கொள்ளப்பட்டது.

கங்குலியை தலைவராக நியமிக்க வேண்டும் – கவாஸ்கர்

Posted by - January 3, 2017

இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் புதியத் தலைவராக சவுரவு கங்குலி நியமிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். லோதா குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றத் தவறியதால், இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் அனுரக் தாகூர் மற்றும் செயலாளர் அஜய் ஷேர்க் ஆகியோரை இந்திய உயர் நீதிமன்றம் பதவி நீக்கியுள்ளது. இது தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள கவாஸ்கர், உயர் நீதிமன்றத்தின்

இந்தியாவுக்கு ஐ.எஸ். அச்சுறுத்தல்

Posted by - January 3, 2017

இந்தியாவின் கிழக்கு எல்லைகளின் ஊடாக ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஸில் இயங்கும் அல் ஜமாத் உல் முஜாஹீடீன் பங்களாதேஸ் அமைப்பினர், இதற்கான திட்டங்களை வகுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த அமைப்பினரே கடந்த ஆண்டு பங்களாதேஸ் – டாக்காவில் தாக்குதல் நடத்தி இருந்தனர். குறித்த அமைப்பு ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து இந்தியாவில் தீவிரவாத செயற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த குழுவுடன் இணைந்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த வருடம்

காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் இடமாற்றம்

Posted by - January 3, 2017

காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி சீ. அருண பிரேமசாந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மெனராகலை பிரதேச பிரதி காவல்துறை மா அதிபராக பதவி உயர்வு வழங்கப்பட்டு அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கடந்த மாதம் 29ஆம் திகதி மெனராகலை பிரதேச பிரதி காவல்துறை மா அதிபராக அவர் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவொன்றின் தீர்ப்புக்கமைய இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்க வேண்டாம் – ஜே.வி.பி

Posted by - January 3, 2017

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கும் ஒப்பந்தத்தை கைவிடுமாறு ஜனாதிபதியிடம் கோரி இருப்பதாக ஜே வி பி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதேநேரம் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹம்பாந்தொட்டையில் எதிர்வரும் ஏழாம் திகதி வரையில் துக்க தினம் அனுஷ்டிக்கப்படுவதாக, திஸ்ஸமஹாராம – லுனகம்வெஹெர ஒன்றிணைந்த பிக்குகள் ஒழுங்கமைப்பு அறிவித்துள்ளது. அத்துடன் துறைமுகத்துக்கு அருகில் எதிர்வரும் 7ஆம் திகதி சத்தியாகிரக போராட்டம் ஒன்றை நடத்தவிருப்பதாகவும்

சிகரட் விலை7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து சிகரட் பாவனை 40சதவீதம் குறைவடைந்துள்ளது- ராஜித சேனாரத்ன

Posted by - January 3, 2017

சிகரட் விலை கடந்த ஒக்டோபர் மாதம் 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து சிகரட் பாவனை 40சதவீதம் குறைவடைந்திருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். வரி அதிகரிப்பின் காரணமாகவே சிகரெட் பாவனை 40 சதவீதமாக குறைவடைந்திருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு மாகாண பதில் முதலமைச்சராக பொன்னுத்துரை ஐங்கரநேசன் (காணொளி)

Posted by - January 3, 2017

வடக்கு மாகாண பதில் முதலமைச்சராக பொன்னுத்துரை ஐங்கரநேசன் இன்று மதியம் 12 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது. வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் 2 வாரத்திற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்வதையிட்டு பதில் முதலமைச்சராக வடக்கு மாகாண விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் பதில் முதலமைச்சராக கடமையாற்றவுள்ளார்.

கட்டுநாயக்க வானூர்தி தள வளாகத்தில் சிறப்பு போக்குவரத்து

Posted by - January 3, 2017

நிர்மாணப் பணிகள் காரணமாக கட்டுநாயக்க வானூர்தி தள சுற்றுப் புறத்தில் சிறப்பு போக்குவரத்து ஒழுங்குகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இன்று பிற்பகல் 3 மணி முதல் நாளை முற்பகல் 9 மணிவரை இந்த வீதி ஒழுங்கு நடைமுறைப்படுத்தப்படும். எதிர்வரும் 4 மாதங்களுக்கு இந்த வீதி ஒழுங்கு தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் முன்னாள் போராளிகள் தமக்கு வேலைவாய்ப்பு வழங்குமாறு கோரி போராட்டம் (காணொளி)

Posted by - January 3, 2017

கிளிநொச்சி இரணைமடு சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் தமக்கு வேலைவாய்ப்பு வழங்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆண், பெண் முன்னாள் போராளிகள், தாங்கள் புனர்வாழ்வு பெற்று வெளியில் வந்த காலம் முதல் நிரந்தர தொழில்கள் ஏதுமின்றி பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் வாழ்ந்து வருவதாகவும், புனர்வாழ்வு பெற்ற காலத்தில் தங்களுக்கு பண்ணை பயிற்சியே வழங்கப்பட்டது என்றும், எனவே சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் வேலைவாய்ப்பை வழங்குமாறு

எல்லை மறுசீரமைப்பு அறிக்கையை வர்த்தமானியில் அறிவிக்குக கஃபே கோரிக்கை

Posted by - January 3, 2017

எல்லை மறுசீரமைப்பு அறிக்கையை விரைவாக வர்த்தமானியின் ஊடாக அறிவிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல்களுக்கான பிரசார அமைப்பான கஃபே இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது. குறித்த அறிக்கையை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு மிகச்சிறந்த பணியை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் அதனை விரைவாக வர்த்தமானி ஊடாக வெளிப்படுத்த வேண்டும் என்று அந்த அமைப்பின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் குறித்த அறிக்கையில் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் சிலர் கைச்சாத்திடாததன் காரணமாக, அதனை அமைச்சர் பைசர் முஸ்தபா நேற்று ஏற்றுக் கொள்ள மறுத்திருந்தமை