நான் நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சராக இருப்பதில் வெட்கமடைகின்றேன் -மனோ

Posted by - January 9, 2017

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையாளிகளுக்கு நல்லாட்சி அரசாங்கத்தால் கூட தண்டனை வழங்க முடியாமல் போயுள்ளமை குறித்து வெட்கமடைவதாக தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற வெள்ளைவான் கலாசாரத்திற்கு எதிராக போராடியமையே லசந்த,தனது உயிரை பலிகொடுக்க காரணமாக அமைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு,எட்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, பொரளை கனத்தையில் நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. இந்த நிகழ்வில்

பொலிஸ்மா திணைக்களம், நாமல் உட்பட 26 பேரை கைது செய்ய நடவடிக்கை

Posted by - January 9, 2017

நீதிமன்ற உத்தரவையும் மீறி ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசியல்வாதிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை முதலீட்டு மையத்திற்கான அடிக்கல் நாட்மும் நிகழ்வு இடம்பெற்ற நேற்று முன்தினம் நடைபெற்றது. இதனை தடுக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட அரசியல்வாதிகளை கைது செய்வதற்காக பொலிஸ் மா அதிபர் ஆணையில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச, ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச,டீ.வீ.சானக தென்

பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நீக்கம்- மஹிந்த ராஜபக்ச

Posted by - January 9, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் 12 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நீக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு வழங்கி வந்த 12 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்றைய தினம் ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமக்கு வழங்கப்பட்டிருந்த மொத்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களில் இவ்வாறு 12 உத்தியோகத்தர்கள் மீள அழைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சோ அல்லது பாதுகாப்புச் செயலாளரோ இதுவரையில் எவ்வித பதிலையும் வெளியிடவில்லை.

அதிஷ்ட இலாப சீட்டு விற்பனையாளர் சங்கம் மீண்டும் எச்சரிக்கை

Posted by - January 9, 2017

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாதபட்சத்தில் மீண்டும் ஒரு தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அதிஷ்ட இலாப சீட்டு விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அதிஷ்ட லாபச் சீட்டுக்களின் விலை 30 ரூபாவாக அதிகரிக்கப்பட்டமை மற்றும் அதிஷ்டலாபச் சீட்டு விற்பனையாளர்களின் தரகு இலாபம் அதிகரிக்கப்படாமை ஆகிய காரணங்களுக்காக இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. ஏற்கனவே குறித்த பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்குமாறு அதிஷ்ட லாப சீட்டு விற்பனையாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து குறித்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது.

ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்க கடற்படை வீரர்கள்

Posted by - January 9, 2017

ஆப்கானிஸ்தானுக்கு 300 கடற்படை வீரர்களை அனுப்ப அமெரிக்கா தீர்மானித்துள்ளது. தலீபான் தீவிரவாதிகளை கட்டுப்படுத்துவதற்காகவே அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவில் நியூயார்க் உலக வர்த்தக மையம், பென்டகன் ராணுவ தலைமையகம் ஆகியவற்றின் மீது கடந்த 2001ஆம் ஆண்டு அல்கொய்தா பயங்கரவாதிகள் வானூர்திகளை கொண்டு தாக்குதல் நடத்தினர். இதன்போது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். இதனை அடுத்து அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்கிய ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்து தலீபான்களை வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து அமெரிக்க படைகள்

இலங்கை இளைஞர்கள் சீனாவின் கூலிக்காரர்கள்

Posted by - January 9, 2017

இலங்கை இளைஞர் யுவதிகளை சீனாவின் கூலிக்காரர்களாக மாற்றுதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை என ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹேலிய ரம்புக்வல இதனை தெரிவித்துள்ளார். காவல்துறை பலத்தை பயன்படுத்தி ஜனநாயகத்தை அழிப்பதற்கு அரசாங்கம் முயற்சித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மீனவர்கள் விடுதலை

Posted by - January 9, 2017

தமிழக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் மூன்று பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் மூவரும் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி தணுஸ்கோடியில் வைத்து கைது செய்யப்பட்டனர். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பரிப்புரைக்கு அமைய இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பிரஸ் ட்ரஸ்ட் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் மைத்திரி

Posted by - January 9, 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை 2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் ஏகமனதாக இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். சுதந்திர கட்சி அமைச்சர்களின் வாராந்த சந்திப்பின் போது, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இந்த தீர்மானம் குறித்து ஜனாதிபதி எந்த கருத்தையும் வெளியிடவில்லை எனவும் சரத் அமுனுகம குறிப்பிட்டார். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியோற்ற வேளையில் தாம்

இந்த ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று

Posted by - January 9, 2017

இந்த ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று இடம்பெறவுள்ளது. இன்றைய முதலாவது அமர்வில் அரசியல் அமைப்பு சீர்திருத்தம் குறித்து விவாதிக்கப்படவிருந்தது. எனினும் அரசியல் அமைப்பு சபை, அதனை கலவரையரையின்றி பிற்போட தீர்மானித்துள்ள நிலையில் அது தொடர்பான விவாதம் இன்று இடம்பெறாது. அரசியல் அமைப்பு சீர்திருத்தம் குறித்து விவாதங்கள் இன்றும், நாளையும், நாளை மறுதினமும் வாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட விருந்தது. இந்தநிலையில் இன்று காலை 9.30 க்கு கூடும் நாடாளுமன்றம் எதிர்வரும் 24ஆம் திகதி மீண்டும் கூடும் என நாடாளுமன்ற

லசந்த கொலை – அடுத்துவரும் அமைச்சரவை கூட்டத்தில் கேள்வி -அமைச்சர் ரவி கருணாநாயக்க

Posted by - January 9, 2017

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணைகளின் நிலை குறித்து அடுத்துவரும் அமைச்சரவை கூட்டத்தில் கேள்வி எழுப்பவுள்ளதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். லசந்த விக்ரமதுங்கவின் நினைவு நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என ரவி கருணாநாயக்க இதன்போது குறிப்பிட்டுள்ளார். இதேவேளை அமைச்சர் என்ற வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து தாம் வெட்கமடைவதாக மனோ கணேசன்