தமிழ்ப் பிரதேசங்கள் திட்டமிட்டு தொடர்ந்து ஒதுக்கப்பட்டுக் கொண்டு வருகின்றன- தவராசா கலையரசன்

Posted by - January 9, 2017

நல்லாட்சி அரசாங்கம் உரிய நிலையான தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் கவலையோடு வேண்டுகோள் விடுத்தார். காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் அதன் தலைமையகத்தில் தலைவர் வெற்றி அருள்குமரன் தலைமையில் நேற்று நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், யுத்தத்தால வடக்கு கிழக்கில் 90 ஆயிரம் விதவைகள் உருவாகியுள்ளனர். இதுவரை

தொடர்ந்து பிள்ளையானுக்கு விளக்கமறியல்(காணொளி)

Posted by - January 9, 2017

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரின் விளக்கமறில் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 23 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும் உத்தரவினை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டார். கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்இ

இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு நலன்புரிச் சேவை

Posted by - January 9, 2017

யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் உடல் அவயங்களை இழந்த இராணுவத்தினரின் குடும்பங்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

ஜி.எஸ்.பி.பிலஸ் கிடைத்தவுடன் மலையகத்தில் கைதொழில் பேட்டைகள் அமைக்கப்படும்

Posted by - January 9, 2017

ஜி.எஸ்.பி. பிலஸ் வரிச்சலுகை கிடத்தவுடன் மலையகத்தில் கைதொழில் பேட்டைகள் அமைக்கப்படுமென மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பின் ஊடாக தேசிய இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு ஏற்பட வேண்டும்

Posted by - January 9, 2017

புதிய அரசியலமைப்பின் ஊடாக தேசிய இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு ஏற்பட வேண்டும் என்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகவும் உறுதியாக இருப்பதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

முதலீடுகள் தொடர்பாக பிழையான கருத்தை ஏற்படுத்த ​வேண்டாம்

Posted by - January 9, 2017

நாட்டின் இயற்கை அமைப்புகளின் மீது முதலீட்டு வாய்ப்புகளை பெற்று இளம் சந்ததிக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக நீர்பாசன மற்றும் நீர்முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

சமூக நலத்திட்டங்களில் தமிழகம் முன்னிலை பெற்று வருகிறது: இந்தியா டுடே மாநாட்டில் ஓ பன்னீர்செல்வம் பேச்சு

Posted by - January 9, 2017

சமூக நலதிட்டங்களில் தமிழகம் முன்னிலை பெற்று வருகிறது என்று இந்தியா டுடே மாநாட்டில் தமிழக முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஈரான் முன்னாள் அதிபர் அக்பர் ஹசெமி ரஃப்சன்ஜனி காலமானார்

Posted by - January 9, 2017

ஈரான் முன்னாள் அதிபர் அக்பர் ஹசெமி ரஃப்சன்ஜனி காலமானார். அவருக்கு வயது 82. உடல்நலக் குறைவு காரணமாக தலைநகர் தெஹ்ரானின் வடக்கு பகுதியில் உள்ள பொது மருத்துவமனை ஒன்றில் அவர் சேர்க்கப்பட்டு இருந்தார். இதனையடுத்து சிகிச்சை பலனின்றி அவரது உயிர் நேற்று (8) பிரிந்தது.

சென்னை புறநகர் பகுதிகளில் ரூ.10 நாணயம் வாங்க வியாபாரிகள் மறுப்பு

Posted by - January 9, 2017

நாடு முழுவதும் கடந்த நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு முதல் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து, அனைத்து வங்கிகளிலும் பணம் பெறுவதற்காக இன்றுவரை பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர்.இதனால் கடந்த 2 மாதங்களாக அனைத்து அரசு மற்றும் தனியார் ஏடிஎம் மையங்கள் செயல்படாமல் மூடியுள்ளன. மேலும், ஒரு சில வங்கிகளில் அளிக்கும் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டை சில்லறையாக மாற்ற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை