நடராஜா ரவிராஜின் கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக அவரது மனைவி மேன்முறையீட்டு மனுத் தாக்கல்

Posted by - January 11, 2017

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர்கள் அனைவரும் விடுவித்து விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக அவரது மனைவி மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். குறிப்பாக வழக்கு விசாரணைகளை ஜுரி சபைக்கு விசாரணை செய்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எடுத்த தீர்மானமானது, சட்டத்திற்கு முரணானது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மனைவி சார்பில் ஆஜரான சட்டத்தரணி மொஹான் பாலேந்திரா தெரிவித்துள்ளார். இந்த சந்தேகநபர்களுக்கு பயங்கரவாத தடைச்

மஹிந்த ராஜபக்ஸவிற்கும், இலங்கைக்கான சீன தூதுவருக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது

Posted by - January 11, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும், இலங்கைக்கான சீன தூதுவருக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தனது பேஸ்புக்கில் செய்தி வெளியிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இலங்கைக்கான சீன தூதுவருக்கு தெளிவூட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 32வது பட்டமளிப்பு விழா(காணொளி)

Posted by - January 11, 2017

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 32வது பட்டமளிப்பு விழா நேற்று இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 32வது பட்டமளிப்பு விழா யாழ்ப்பாண பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் பத்மநாதன் மாணவர்களுக்கான பட்டங்களையும் பட்ட சான்றிதழ்களையும் வழங்கிவைத்தார். பட்டமளிப்பு விழா 5 அமர்வுகளாக இடம்பெற்றன. காலை 9 மணி, 10.30 மணி, 11.30 மணி, பிற்பகல் 2 மணி மற்றும் 3.30 மணி ஆகிய ஐந்து அமர்வுகளாக இடம்பெற்றன. தொள்ளாயிரத்து ஐம்பத்து இரண்ட மாணவர்கள் பட்டங்களையும் பட்ட சான்றிதழ்களையம் பெற்றுக்கொண்டனர். 4 பேர் கலாநிதி

மத்திய அரசாங்கத்தின் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் அமைக்கப்பட்ட பேருந்து நிலைய திறப்பு விழா நிகழ்விற்கு வடக்கு மாகாண சபையினர் புறக்கணிக்கப்பட்டனர்- ஆ.அஸ்மின் (காணொளி)

Posted by - January 11, 2017

மத்திய அரசாங்கத்தின் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் அமைக்கப்பட்ட பேருந்து நிலைய திறப்பு விழா நிகழ்விற்கு வடக்கு மாகாண சபையினர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் ஆ.அஸ்மின் குற்றம் சுமத்தியுள்ளார். வடக்கு மாகாணசபையின் 82ஆவது அமர்வு அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்று நடைபெற்ற போது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டது. வவுனியாவில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தின் திறப்பு விழா நிகழ்வு எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் குறித்த பேருந்து நிலைய திறப்பு விழா நிகழ்விற்கு

கல்முனைக்கு சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி கடத்தி செல்லப்பட் செம்மறி ஆடுகள் (காணொளி)

Posted by - January 11, 2017

திருகோணமலை – மூதூரிருந்து கல்முனைக்கு சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி கடத்தி செல்லப்பட் செம்மறி ஆடுகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதன்போது ஆடுகளைக்கடத்திய நபரும் கைதுசெய்யப்பட்டு பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சனத் நந்தலாலின் பணிப்புரையின் பேரில் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஐ.பி.பொடி பண்டார தலைமையிலான பொலிஸார் வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது வாகனமொன்றை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். இதன்போதே அனுமதிப் பத்திரமின்றி ஆடுகள் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதன்போது கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனமும் பொலிஸாரால் தடுத்து

உழவு இயந்திரம் மற்றும் லான் மாஸ்ரர்கள் அவற்றின் பெட்டிகளுக்கு இரவில் உழவு இயந்திரம் மற்றும் லான் மாஸ்ரர்கள் இரவில் தெரியக்கூடிய வகையில் வெளிச்சம் பொருத்தப்பட வேண்டும்(காணொளி)

Posted by - January 11, 2017

உழவு இயந்திரம் மற்றும் லான் மாஸ்ரர்கள் இரவில் செலுத்தப்படும் போது அவற்றின் பெட்டிகளுக்கு இரவில் தெரியக்கூடிய வகையில் வெளிச்சம் பொருத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர்அரியகுட்டி பரஞ்சோதி தெரிவித்தார். நேற்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் பொது மக்கள் பாதகாப்புக்குழுக் கூட்டம் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற போது இக்கருத்தை nவிளியிட்டார். இரவில் லான்மாஸ்ரர் மற்றும் உழவு இயந்திரப் பெட்டிகளின் பின்புறத்தில் ஒளிரக்கூடிய ஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட வேண்டும் என்று தெரிவித்த வடக்கு மாகாணசபை உறுப்பினர் அரியகுட்டி பரஞ்சோதி

காரைநகர் ஈழத்து சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவ தேர்த்திருவிழா(காணொளி)

Posted by - January 11, 2017

யாழ்ப்பாணம் காரைநகர் ஈழத்து சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவ தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. கடந்த 2ஆம் திகதி ஆரம்பமான மார்கழித் திருவாதிரையின் 9ஆம் உற்சவமாகிய தேர் உற்சவத்தில் 5 தேர்கள் வீதி உலா வந்தன. ஐந்து தேர்களும் ஒன்றன்பின் ஒன்றாக மூன்றாம் வீதியான பெருவீதியில் தேர் ஊர்வலம் இழுத்துவரப்பட்டது. ஒன்றன்பின் ஒன்றாக இழுத்துவரப்பட்ட தேரில் முதலாவது தேரில் விநாயகருடன் முருகப்பnருமான் வள்ளி தெய்வானை சமேதராக வீற்றிருக்கும் தேரும், இரண்டாவது தேரில் அரிகர புத்திரனாகிய ஐயனாரும், மூன்றாம் தேரில்

தமிழராட்சி மாநாட்டின்போது கொல்லப்பட்ட மக்களின் நினைவுதினம் (காணொளி)

Posted by - January 11, 2017

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழராட்சி மாநாட்டின்போது கொல்லப்பட்ட மக்களின் நினைவுதினம் நேற்று நினைவுகூரப்பட்டது. 1974ஆம் ஆண்டு இதே தினத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழராட்சி மாநாட்டின்போது கொல்லப்பட்ட 9 மக்களின் 43ஆவது நினைவுதினம் நினைவுத்தூபியில் நினைவுகூரப்பட்டது. வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நினைவுதின நிகழ்வுகள் இடம்பெற்றன.நினைவுத்தூபிக்கு முன்பாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவு தூபிகளுக்கு மலர்மாலை அணிவித்து நினைவுகூரல் நடைபெற்றது. நினைவுகூரல் நிகழ்வில் வடக்கு மாகாணசபையின் பதில் முதலமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் இவ்வாறு உரையாற்றினார்.

பஸ்தரிப்பு நிலையம் மற்றும் கோட்டைப் பகுதியில் சமூக சீர்கேட்டுச் செயற்பாடுகளை பொலிஸார் கண்காணிக்க வேண்டும்- கௌதமன் (காணொளி)

Posted by - January 11, 2017

யாழ்ப்பாணத்தில் பஸ்தரிப்பு நிலையம் மற்றும் கோட்டைப் பகுதியில் சமூக சீர்கேட்டுச் செயற்பாடுகளை பொலிஸார் கண்காணிக்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் சிறுவர் மகளிர் விவகார பகுதியை சேர்ந்த கௌதமன் தெரிவித்தார். நேற்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்கூட்டத்தில் இதனைக் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் பஸ் தரிப்ப நிலையத்தில் மாலை, இரவு நேரங்களில் பெண்களின் மீது ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தல், பெண்களை துன்புறுத்துகின்ற பாலியல் ரீதியான வார்த்தைப் பிரயோகங்கள் இடம்பெறுகின்றன என பல முறைப்பாடுகள்

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடம் மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது (காணொளி)

Posted by - January 11, 2017

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த கட்டிட திறப்பு நிகழ்வு தொடர்பில் ஆராயும் வகையில் ஜனாதிபதி செயலக உதவி சிரேஷ்;ட செயலாளர் தலைமையிலான குழுவொன்று களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். ஜெய்க்கா திட்டத்தின் கீழ், மத்திய சுகாதார அமைச்சின் நிதியொதுக்கீட்டில்; 415 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள வைத்தியசாலை கட்டிடமே ஜனாதிபதியினால் திறந்துவைக்கப்படவுள்ளன. அத்துடன், ஜனாதிபதி வருகையை முன்னிட்டு அதற்கான