கல்முனைக்கு சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி கடத்தி செல்லப்பட் செம்மறி ஆடுகள் (காணொளி)

415 0

semmari-adugalதிருகோணமலை – மூதூரிருந்து கல்முனைக்கு சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி கடத்தி செல்லப்பட் செம்மறி ஆடுகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது ஆடுகளைக்கடத்திய நபரும் கைதுசெய்யப்பட்டு பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சனத் நந்தலாலின் பணிப்புரையின் பேரில் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஐ.பி.பொடி பண்டார தலைமையிலான பொலிஸார் வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது வாகனமொன்றை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன்போதே அனுமதிப் பத்திரமின்றி ஆடுகள் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதன்போது கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனமும் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.குறித்த சந்தேகநபரை களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் பதில் நீதிபதி ஏ.மனாப் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது குறித்த நபரை பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.