நுவரெலியாவில் பல பாதைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன(காணொளி)

Posted by - January 13, 2017

நுவரெலியா ஹட்டன் ரொத்தஸ் கடைதொகுதியில் இருந்து பழைய கொழும்பு பாதை வரையிலான படிகட்டுப் பாதை மற்றும், ரொத்தஸ் பிரிவு இரண்டில் அமைக்கப்பட்ட கோவில் படிக்கட்டுப் பாதை என்பன திறந்து வைக்கப்பட்டுள்ளன. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதாரங்கள் அமைச்சின் வழிகாட்டிலில், கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் குறித்த படிக்கட்டுப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறித்த படிக்கட்டுப் பாதை திறக்கும் நிகழ்விற்கு மத்திய மாகாண சபை உறுப்பினர் இராதாகிருஸ்ணன் ராஜாராம் தலைமை தாங்கினார். இதன்போது நிகழ்வில் உரையாற்றிய மத்திய மாகாண

மலையகத்தில் தைத்திருநாளை முன்னிட்டு வர்த்தக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் இன்று அதிகரித்துள்ளது(காணொளி)

Posted by - January 13, 2017

  தைத்திருநாளை முன்னிட்டு மலையகத்தில் வர்த்தக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் இன்று அதிகரித்து காணப்பட்டது. தைத்திருநாளுக்கு தேவையான பூஜை பொருட்கள், புத்தாடைகள், அத்தயாவசியப்பொருட்கள் போன்றவற்றை மக்கள் கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிந்தது. இதேவேளை தைத்திருநாளை முன்னிட்டு பொலிஸார் விசேட கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வலிகாமம் வடக்கு முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான வீடுகளை அமைக்கும் வேலைகள் இராணுவத்திடம் (காணொளி)

Posted by - January 13, 2017

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான 33 வீடுகளை அமைக்கும் வேலைகளை இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளனர். வலி.வடக்கு காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு சொந்தமான காணியில் வீடுகள் அமைக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. மாவிட்டபுரம் கீரிமலை வீதியில் இடம்பெயர்ந்த காணியற்ற மக்களுக்காக 100 வீடுகள் அமைக்கப்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் கடந்த நவம்பர் மாதம் 31ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்பட்டன. வீடுகள் வழங்கப்படாது முகாமில் தங்கியுள்ள 33 மக்களுக்கான வீடுகள் அமைக்கும் பணியினை தற்போது இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளனர்.

வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் மரதன் ஓட்டப் போட்டி இன்று நடைபெற்றது(காணொளி)

Posted by - January 13, 2017

வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியின் 2017 ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டு போட்டியின் முதல் நிகழ்வாக ஆண் மற்றும் பெண்களுக்கான மரதன் ஓட்டம் இன்று காலை கல்லூரி அதிபர் ரீ.பூலோகசிங்கம் தலைமையில் நடைபெற்றது. வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியின் நிகழ்வினை பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் ஆசிரியருமான கே.நிரஞ்சன் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் பொருளாளருமான எஸ்.தவச்செல்வன் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர். கல்லூரியின் ஆண்களுக்கான மரதன் ஓட்டத்தில் வெற்றிபெற்றவர்களான கே.நிசாந்தன், கே.நிசோபன் மற்றும் இ.கிரிதரன் ஆகியோருக்கான வெற்றி

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறட்சி காரணமாக சுமார் 70 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு- அனர்த்த முகாமைத்துவ நிலையம் (காணொளி)

Posted by - January 13, 2017

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறட்சி காரணமாக சுமார் 70 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலைமை தொடர்பில் ஆராயும் வகையில் விசேட மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைவாக இந்த கூட்டம் இன்று காலை நடாத்தப்பட்டது. மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களான இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் ஆகியோரின் தலைமையில்

கிளிநொச்சியில் டெங்கு நோய் வேகமாகப் பரவிவருகின்றது- சுகாதார பிரிவு(காணொளி)

Posted by - January 13, 2017

கிளிநொச்சியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவருவதாகவும், கடந்த 1ஆம் திகதியில் இருந்து 13ஆம் திகதி வரை சுமார் 28 டெங்கு நோயாளர்கள் இனம்காணப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கிளிநொச்சி மாவட்ட சுகாதார பிரிவினர், கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினருடன் இணைந்து சிரமதான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், சிவில் பாதுகாப்பு திணைக்களம், பிரதேச சபை என்பன சிரமதான பணிகளை மேற்கொண்டு வருவதுடன், சிவில் பாதுகாப்பு திணைக்கள நாடகக் குழுவினரால், டெங்கு

யாழ்ப்பாண நகரப்பகுதியில் பொங்கல் தினத்தை முன்னிட்டு வியாபார நடவடிக்கைகள் களைகட்டியுள்ளன(காணொளி)

Posted by - January 13, 2017

பொங்கல் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண நகரப்பகுதியில் வியாபார நடவடிக்கைகள் களைகட்டியுள்ளன. உழவர் திருநாளான தைப்பொங்கல் தினம் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் பொங்கலுக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் யாழ்ப்பாண நகர் மற்றும் நகரை அண்டிய சந்தைப்பகுதிகளில் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.]  

கிளிநொச்சி, பரந்தன் சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த ஐந்து நாட்களாக எரிபொருள் இல்லாமையினால் பெரும் சிரமத்திற்கு உட்படுவதாக சாரதிகள் விசனம் (காணொளி)

Posted by - January 13, 2017

கிளிநொச்சி, பரந்தன் சந்தியில் அமைந்துள்ள கூட்டுறவு சங்கம் ஒன்றின் ஆளுகைக்கு உட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த ஐந்து நாட்களாக எரிபொருள் இல்லாமையினால் பெரும் சிரமத்திற்கு உட்படுவதாக சாரதிகள் விசனம் தெரிவித்துள்ளனர். வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு செல்லும் பிரதான சந்தியாக அமைந்துள்ள, பரந்தன் சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தை எதிர்பார்த்தே சிற்றூர்தி சாரதிகள் முதல் பார ஊர்தி சாரதிகள் வரை பயணிக்கின்றனர். இந்நிலையில் குறித்த எரிபொருள் நிலையத்தில் கடந்த ஐந்து நாட்களாக எரிபொருள்

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மக்கள் தைப்பொங்கல் நிகழ்வுகளில் ஆர்வம் காட்டுவது குறைவாக காணப்படுகின்றது (காணொளி)

Posted by - January 13, 2017

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் தைப்பொங்கல் நிகழ்வுகளில் கடந்த காலங்களை விட இவ்வருடம் ஆர்வம் காட்டுவது குறைவாக காணப்படுகின்றது. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக விவசாயிகளின் வாழ்வாதார தொழிலான விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளைய தினம் நடைபெறவுள்ள தைப்பொங்கலுக்கு கடந்த காலங்களை விட மக்கள் ஆர்வம் காட்டுவது குறைவாக காணப்படுகின்றது. நகரின் முக்கிய இடங்களில் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாக காணப்;படுவதுடன் பொங்கல் பொருட்களை கொள்வனவு செய்வதிலும் ஆர்வம் காட்டுவது குறைவாக

ஒட்டுசுட்டான் பகுதியில் காட்டுயானைகளின் அட்டகாசம் மக்கள் கவலை(காணொளி)

Posted by - January 13, 2017

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் காட்டுயானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மன்னாகண்டல் வெளிவயல்குளம் பகுதிக்குள் புகுந்த காட்டுயானைகள் பெருமளவான நெற்பயிர்களை அழித்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள மன்னாகண்டல் வெளிவயல் குளத்தின் கீழ் 650 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல் நிலங்களில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டபோதும் பருவமழையின்மை காரணமாக பெருமளவான செய்கைகள் கைவிடப்பட்டுள்ளன. இந்நிலையில் எஞ்சியுள்ள பயிர் செய்கைகளை நீர் இறைக்கும் இயந்திரங்களை கொண்டு கிணற்று நீரைப்பயன்படுத்தியும்