எமது மக்களை நாமே ஆளக்கூடிய சூழலை உருவாக்குவோம் – எம்.ஏ.சுமந்திரன்!

Posted by - January 20, 2017

தமிழ் மக்கள் தமது அபிலாசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் சூழலை புதிய அரசியல் யாப்பின்மூலம் உருவாக்குவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கனகராயன்குளம் மகாவித்தியாலயத்திற்கான புதிய தொழிநுட்ப பீட கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

Posted by - January 19, 2017

வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்திற்கான புதிய தொழிநுட்ப பீட கட்டடம் உள்ளுராட்சிகள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது. உலக வங்கி மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்க நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்திற்கான புதிய தொழினுட்ப பீட கட்டடம் உள்ளுராட்சிகள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டது. வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வானது மாணவர்களின் பாண்ட் வாத்திய மேளங்களுடன் பிரதம

இரணைமடுக்குளத்தின் அபிவிருத்திப் பணிகளை பைசர் முஸ்தபா பார்வையிட்டார்(காணொளி)

Posted by - January 19, 2017

இரணைமடுக்குளத்தின் அபிவிருத்திப் பணிகளை உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா பார்வையிட்டார். இன்றைய தினம்  கிளிநொச்சிக்கு விஜயம்  செய்த  உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா, இரணைமடு பிரதான  வீதியில் அமைந்துள்ள பாலம்  ஒன்றினை திறந்து வைத்ததுடன், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் இரணைமடுக்குளத்தின் அபிவிருத்தி பணிகளையும் பார்வையிட்டார். குறித்த நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்களான  அங்கஜன்  இராமநாதன், மஸ்தான் வட மாகாண போக்குவரத்துத்துறை அமைச்சர் டெனீஸ்வரன்  மாகாணசபை

அரசாங்கம் எங்களின் விருப்பத்தை அறியாமல் தாங்கள் நினைப்பதை எங்கள் மீது திணிக்கின்றது- விக்னேஸ்வரன்

Posted by - January 19, 2017

வடமாகாணத்தில் மத்திய அரசாங்கம் தம் நல்லெண்ணத்தை காட்டும் ஒரு சில நடவடிக்கைகளையே மேற்கொண்டிருக்கின்றது என்றும், பெரும்பாலான விடயங்கள் தாங்கள் நினைப்பதை எங்களின் விருப்பத்தை அறியாமல் எங்கள் மீது திணிப்பதாகவே இருக்கின்றது என்றும், என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் பிறைஸ் ஹச்சீசனிடம் சுட்டிக்காட்டியுள்ளார். நெடுந்தீவுக்கான போக்குவரத்து படகு நெடுந்தாரகை நாளைய தினம் வெள்ளோட்டம் விடப்படவுள்ள நிலையில், அந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் பிறைஸ் ஹச்சீசன் இன்றைய தினம் வடமாகாண

சீனாவின் அலிபாபா நிறுவனம் இலங்கையில் முதலீடு செய்யத் தயார்- ரவி கருணாநாயக்க

Posted by - January 19, 2017

உலகில் பிரபல்யமான சீனாவின் அலிபாபா நிறுவனம், இ-கொமர்ஸ் துறையில் இலங்கைக்கு முதலீடு செய்ய தயாரகவுள்ளது என இலங்கை நிதி அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற இணையவழி வணிகத்தளங்களின் குழுமமான அலிபாபா குழுமத்தின் செயல் தலைவரான ஜாக் மா மற்றும் இலங்கை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜாக்மா இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார். மேலும்,இலங்கையில் online  வணிக நிறுவனங்களை ஊக்குவிப்பது தொடர்பிலும் அலிபாபா குழுமத்தின் செயல் தலைவரான ஜாக் மா கூறியுள்ளார். கடந்த

வித்தியா கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - January 19, 2017

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் 12 பேரையும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை பதில் நீதவான் ஆர்.சபேசன் உத்தரவு பிறப்பித்துள்ளார். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். ஒரு

புதையல் தோண்டிய இராணுவத்தினர் கைது

Posted by - January 19, 2017

தொப்பிகல், தம்மின்ன வீதியில் உள்ள வலமண்டிய இராணுவ முகாமுக்கு அருகில் இருக்கும் புராதன இடம் ஒன்றில் புதையல் தேடி கற்பாறைக்கு கீழ் தோண்டிய இரண்டு இராணுவத்தினர் உட்பட 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களை அரலகங்வில பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். வலமண்டிய இராணுவ முகாமில் கடமையாற்றும் இரண்டு இராணுவத்தினரும் தெய்யத்தகண்டிய ,மாவனாவேல பிரதேசத்தை சேர்ந்த 4 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம் இருந்து நீர் இரைக்கும் இயந்திரம், மண் வெட்டி,

எமது மக்கள் தங்களை தாங்களே ஆளக்கூடிய வகையிலான உரித்தினை ஏற்படுத்தும் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவோம்-சுமந்திரன்

Posted by - January 19, 2017

தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் எமது மக்களை தங்களை தாங்களே ஆளக்கூடிய வகையிலான உரிமையினை ஏற்படுத்தும் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இன்று நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர். பல்வேறு ஏக்கத்தின் மத்தியிலும் இந்த வருடமும் தீர்வுத்திட்டம் தவறிப் போய்விடுமா என்ற கவலையுடனேயே

த.தே.கூட்டமைப்பின் சிறந்தவர்களில் சுமந்திரனும், சம்பந்தனும் தெரிவு

Posted by - January 19, 2017

சிறந்த கட்சி உறுப்பினர்கள் பட்டியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர். நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளில் திறமையாக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் பட்டியலிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீநேசன், இரா.சம்பந்தன், சிறீதரன் மற்றும் சார்ல்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். குறித்த மதிப்பீடு கடந்த வருடம் 2015

வறட்சி நிவாரண நடவடிக்கைகளுக்கு உலக உணவுத்திட்டம் ஆதரவு

Posted by - January 19, 2017

வறட்சி காரணமாக ஏற்பட்டுள்ள சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கு இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பு மற்றும் உதவிகளை வழங்குவதாக உலக உணவுத் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எதரின் கொஸின் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் இடம்பெறும் உலக பொருளாதார மாநாட்டின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று சந்தித்த போதே இதனை குறிப்பிட்டுள்ளார். வறட்சி காரணமாக விவசாயம் மற்றும் நீர் மின் உற்பத்திகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பாக இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. இதேவேளை, எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் இலங்கை வரவுள்ளதாகவும் உலக உணவுத்