இரணைமடுக்குளத்தின் அபிவிருத்திப் பணிகளை பைசர் முஸ்தபா பார்வையிட்டார்(காணொளி)

284 0

eranaimaduஇரணைமடுக்குளத்தின் அபிவிருத்திப் பணிகளை உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா பார்வையிட்டார்.

இன்றைய தினம்  கிளிநொச்சிக்கு விஜயம்  செய்த  உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா, இரணைமடு பிரதான  வீதியில் அமைந்துள்ள பாலம்  ஒன்றினை திறந்து வைத்ததுடன், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் இரணைமடுக்குளத்தின் அபிவிருத்தி பணிகளையும் பார்வையிட்டார்.

குறித்த நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்களான  அங்கஜன்  இராமநாதன், மஸ்தான் வட மாகாண போக்குவரத்துத்துறை அமைச்சர் டெனீஸ்வரன்  மாகாணசபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை , அரியரத்தினம், தவநாதன் , கிளிநொச்சி  மாவட்ட  அரசாங்க அதிபர்  சுந்தரம் அருமைநாயகம் , கிளிநொச்சி பிராந்திய பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர்  எந்திரி சுதாகரன் மற்றும் திணைக்களங்களின்  தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.