நாடுகடத்தப்படவுள்ள இலங்கைக் குடும்பத்திற்கு ஹமீஸ் ஆதரவுக் குரல்

Posted by - November 16, 2017

நியூசிலாந்தில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள, இலங்கை குடும்பம் ஒன்றுக்கு ஆதரவாக, அந்த நாட்டு குடிவரவு அமைச்சருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

விஷேட அதிரடிப்படை வீரர்கள் இருவருக்கும் 30ம் திகதி வரை விளக்கமறியல் !

Posted by - November 16, 2017

யாழ்ப்பாணம் மணியம் தோட்டம் பகுதியில் இளைஞன் ஒருவனை சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பொலிஸ் விஷேட

வருமானவரித் துறை அலுவலகத்தில் இளவரசி மகள்கள் கிருஷ்ணபிரியா, ஷகிலா, ஜெயா டிவி மேலாளரிடம் விசாரணை: வாக்குமூலங்கள் வீடியோவில் பதிவு

Posted by - November 16, 2017

நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் இளவரசியின் மகள்கள் கிருஷ்ணபிரியா, ஷகிலா, ஜெயா டிவி மேலாளர் நடராஜன் ஆகியோர் நேற்று ஆஜராகினர். சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் கடந்த 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை 5 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தமிழ்நாடு, புதுவை, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் 187 இடங்களில் 1800-க்கும் அதிகமான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் சிக்கிய ஆவணங்களை வைத்து, அதில் தொடர்புடையவர்களை

இந்திய கடலோர காவல்படை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராமேசுவரத்தில் மீனவர்கள் 3 ஆயிரம் பேர் வேலைநிறுத்தம்: கைது செய்ய வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம்

Posted by - November 16, 2017

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடலோர காவல் படையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 13-ம் தேதி கடலுக்குச் சென்ற, பாம்பனைச் சேர்ந்த ஜெபமாலை என்பவருக்குச் சொந்தமான விசைப்படகைச் சேர்ந்த மீனவர்கள், தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த இந்திய கடலோர காவல் படையினர் மீனவர்களின் படகை நோக்கிச் சுட்டதில் பிச்சை ஆரோக்கியதாஸ், ஜான்சன்

மீனவர்களை தாக்குவதை தவிர்க்க பாதுகாப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கே.பழனிசாமி கடிதம்

Posted by - November 16, 2017

சொந்த நாட்டு மீனவர்கள் மீது கடலோர காவல்படையினர் தாக்குதல் நடத்துவதை தவிர்க்க பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு அவர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பாக் நீரிணை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த அப்பாவி தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். துரதிருஷ்டவசமான சம்பவம் குறித்து தங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறேன். ராமேசுவரம் மீன்பிடி தளத்தில் இருந்து கடந்த 13-ம் தேதி இயந்திர

ஜிம்பாப்வே அதிபர் வீட்டுச்சிறையில் அடைப்பு!

Posted by - November 16, 2017

ஜிம்பாப்வே நாட்டில் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அதிபர் ராபர்ட் முகாபே வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதேவேளை 37 ஆண்டுகளாக அதிபராக இருந்துவரும் ராபர்ட் முகாபேக்கு 93 வயதாகிவிட்டது. இதனையடுத்து அவரைவிட 41 வயது இளையவரான அவர் மனைவி கிரேஸ் ஆட்சியை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அமைச்சர்கள், அதிகாரிகள் பதவியை விட்டு நீக்கப்பட்டனர். இதனால் உள்நாட்டுக் கலவரங்கள் வெடித்தன. இந்நிலையில் நேற்று உள்நாட்டு அரசு தொலைக்காட்சியில் தோன்றிய ராணுவ ஜெனரல் எஸ்.பி.மேயோ, ஆட்சியை ராணுவம்

வடக்கில் காலூன்றியுள்ளது “தாரா குழு”

Posted by - November 16, 2017

யாழ்.குடாநாட்டினில் வலிகாமம் பகுதியினில் அடையாளப்படுத்தப்பட்ட ஆவா குறூப்பினைத் தொடர்ந்து வடமராட்சிப் பகுதியினில் தாரா குறூப் பிரபல்யமடையத் தொடங்கியுள்ளது. வடமராட்சிப்பகுதியினில் நடந்தேறிய பல பாரிய கொள்ளைகள் மற்றும் செயின் பறிப்புக்களுடன் இவ்வணிக்கு தொடர்புகளிருப்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. பருத்தித்துறை கொட்டடி மற்றும் வளலாய் அன்ரனிபுரம் ஆகிய பகுதிகளை மையமாக வைத்து இந்த கும்பல் செயற்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை,நெல்லியடி பொலிஸ் பிரிவுகளினில் நடைபெற்ற பல கொள்ளைகள் மற்றும் செயின் பறிப்புக்களுடன் இவ்வணிக்கு நேரடி தொடர்பிருப்பது விசாரணைகளினில் கண்டறியப்பட்டுள்ளது.

ஜெனீவாவுக்கு அளித்த உறுதிமொழியை இலங்கை நிறைவேற்றவில்லை- மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Posted by - November 16, 2017

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சர்வதேச காலக்கிரம மீளாய்வு அமர்வு நேற்று புதன்கிழமை ஆரம்பமாகியிருக்கும் நிலையில், பேரவையின் உறுப்பு நாடுகள் மறுசீரமைப்புக்கான காலவரையறையுடன் கூடிய  செயற்பாட்டுத் திட்டத்திற்கு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்திருக்கின்றது. பாரதூரமான உரிமை மீறல்கள் மற்றும் ஏனைய முக்கியமான உறுதிப்பாடுகள்  என்பனவற்றுக்கு பதிலளிக்கும் கடப்பாட்டை உறுதிப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் உட்பட இலங்கையில்  தொடர்ச்சியாக இருந்து வரும் அரசாங்கங்கள் தவறிவிட்டதாக நியூயோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள்

லயன் குடியிருப்பொன்றில் தீடீர் தீ;மூன்று வீடுகள் எரிந்து சாம்பலாகின

Posted by - November 16, 2017

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்ட்ட செனன் கே.ஜி பிரிவில் லயன் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீடீர் தீ விபத்தினால் மூன்று குடியிருப்புகள் சேதமாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை 10.15 மணியளவிலேயே இந்த தீ விபத்து சம்பவித்துள்ளது. நான்கு வீடுகளை கொண்ட குறித்த லயன் குடியிருப்பில் ஒரு குடியிருப்பு முற்றாக சேதமாகியுள்ளதுடன் மேலும் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளன. தீ விபத்தில் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை எனினும் வீட்டின் உபரணங்கள் சேதமாகியுள்ளன. ஹட்டன் பொலிஸாரும் பொதுமக்களும் ஹட்டன் நகரசபை

ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முறைப்பாடு

Posted by - November 16, 2017

2018 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 188,189 ஆம் பிரிவுகளில் முறையே முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கான நிதி, மன்னார் மாவட்டத்திற்கான பிரதான பஸ் நிலையத்திற்கான நிதி ஆகியன அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சின் கீழ் ஒதுக்கப்பட்டிருக்கின்றமைக்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி தெரிவித்தார். குறித்த தவறு திருத்தப்பட்டாக வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் இந்த விடையம் தொடர்பாக எழுத்து மூலமாக கையளிக்குமாறு ஜனாதிபதி