மாங்குளம் அம்பாள்புரம் கிராமத்தில் இரு குழுக்களுக்கடையே மோதல்

Posted by - January 28, 2017

முல்லைத்தீவு, மாங்குளம் அம்பாள்புரம் கிராமத்தில் இரு குழுக்களுக்கடையே ஏற்பட்ட மோதலில் ஐவர் படுகாயமடைந்தனர். மாங்குளம் 06ஆம் கட்டை அம்பாள்புரம் கிராமத்தில் இரு குழுக்களுக்கடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம், மோதலாக மாறி இடம்பெற்ற வாள்வீச்சில் ஐவர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பாள்புரம் கிராமத்தை சேர்ந்த இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த நால்வர் மதுபோதையில் மோதலில் ஈடுபட்டதாகவும், இதனை அவதானித்த வீதியால் சென்ற ஒருவர் அவர்களை விலக்குவதற்கு முற்பட்டபோது அவர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்ற நிலையில் இருந்து அபிவிருத்தியடைந்த நாடு என்ற கட்டத்திற்கு இலங்கையை கொண்டு செல்வதே எமது நோக்கம்- ரணில்

Posted by - January 28, 2017

  அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்ற நிலையில் இருந்து அபிவிருத்தியடைந்த நாடு என்ற கட்டத்திற்கு இலங்கையை கொண்டு செல்வதே தமது நோக்கம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். முத்துராஜவல கைத்தொழில் வலயத்தில் தொழில் நகரத்தின் முதற்கட்ட பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய பிரதமர், தொழில்வாய்ப்புத் துறையில் தீவாக இருக்கும் இலங்கையை உப கண்டமாக மாற்ற அனைத்து பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார். நாட்டில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கும் அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை

இனவாதத்தை பரப்பி நாட்டில் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது- பழனி திகாம்பரம்

Posted by - January 28, 2017

இனவாதத்தை பரப்பி நாட்டில் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். அம்பகமுவ பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார். இனவாதத்தை தூண்டி ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு தமிழ், சிங்கள மக்கள் இனி எப்போதும் இடமளிக்க போவதில்லை. நாட்டில் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருக்கும் போது நாட்டில்

அரசியல்வாதிகள் கொள்கைகள் பற்றிய அறிவை கட்டாயமாக பெற்றிருக்கவேண்டும்- விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - January 28, 2017

அரசியல்வாதிகள் கொள்கைகள் பற்றிய அறிவை கட்டாயமாக பெற்றிருக்கவேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற, வடமாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கில் உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், கொள்கைகள் நெகிழத்தக்கதாகவும், திட்டமிடுதலுக்கும், அபிவிருத்திக்கும் உறுதியான அடிப்படையாகவும் இருக்க வேண்டும் என்று கூறினார்……

யாழ் பொது நூலக கேட்போர்கூடத்தில் வடக்கு மாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கு ஆரம்பமானது(காணொளி)

Posted by - January 28, 2017

வடக்கு மாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கு யாழ் பொது நூலக கேட்போர்கூடத்தில் இன்றைய தினம் ஆரம்பமானது. வடக்கு மாகாணத்தில் காணப்படும் நிலத்தடி நீர்வளத்தை பாதுகாத்தல், நீர் மாசுபடுதல் மற்றும் நீர்வளம் அழிந்து போகாது பாதுகாத்தல் தொடர்பான வடக்கு மாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கு, யாழ்ப்பாண பொது நூலக கேட்போர்கூடத்தில் இன்று ஆரம்பமானது. வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தலைமையில் இன்றைய ஆய்வரங்கம் ஆரம்பமானது. இன்று ஆரம்பமான வடக்கு மாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கு, நாளையும்,

2020 க்குப் பின்னர் நடைபெறும் தேர்தலில் மக்கள் தீர்ப்புக்கு அமையவே அனைத்தும் அமையும்-மைத்ரிபால சிறிசேன

Posted by - January 28, 2017

அதிகாரத்திற்காக அன்றி நாட்டைக் கட்டியெழுப்பவே அனைவரும் இன்று ஒன்றிணைந்து போராடவேண்டியுள்ளது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்துள்ளார்.   அதிகாரத்தைக் கோரி சிலர் போராட்டங்களை முன்னெடுத்த போதும் 2020 க்குப் பின்னர் நடைபெறும் தேர்தலில் மக்கள் தீர்ப்புக்கு அமையவே அனைத்தும் அமையும். அதற்கு முன்னர் அரசியல் அதிகாரம் குறித்து எவருக்கும் நினைத்துப்பார்க்கவும் முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.   தேர்தல் காலத்தில் அரசியல் நோக்கங்களுக்காக போராட்டங்களை முன்னெடுத்த போதும் மக்கள் விருப்பத்தில் தெரிவான புதிய அரசாங்கம்

மனிதன் இயற்கையை அழித்த காரணத்தினால் தற்போது நீருக்கான தேவை அதிகரித்து காணப்புடகின்றது- சீ.வி.கே.சிவஞானம்(காணொளி)

Posted by - January 28, 2017

மனிதன் இயற்கையை அழித்த காரணத்தினால் தற்போது நீருக்கான தேவை அதிகரித்து காணப்படுவதாக வடக்குமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இதேவேளை, வடக்கிலே சில நீர்நிலைகள் மூடப்பட்டமைக்குரிய காரணகர்த்தாக்களில் தானும் ஒருவர் எனவும் வடக்குமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற, வடமாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கில் உரையாற்றிய வடக்குமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம்…..

கிணறுகளுக்கு அருகில் மலசலகூட குழிகள் அமைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்- வசந்தி அரசரட்ணம்(காணொளி)

Posted by - January 28, 2017

வடக்கு மாகாணத்தில் கிணறுகளுக்கு அருகில் மலசலகூட குழிகள் அமைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் கேட்டுக்கொண்டார். யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற, வடமாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கில் உரையாற்றிய யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம், வடக்கு மாகாணத்தில் கிணறுகளுக்கு அருகில் மலசலகூட குழிகள் அமைக்கப்படுவதை தடுப்பதற்கு, வடக்கு மாகாணசபை முக்கிய சட்டங்களை அமுல்ப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வடக்கு மகாணத்தில் அமைக்கப்பட்ட பல குளங்கள் சேதமடைந்துள்ளதாகவும்,

உலகம் முழுவதும் நீருக்கான பெரும் நெருக்கடியான நிலை சத்தமில்லாது உருவாகியுள்ளது- ஐங்கரநேசன்(காணொளி)

Posted by - January 28, 2017

உலகம் முழுவதும் நீருக்கான பெரும் நெருக்கடியான நிலை சத்தமில்லாது உருவாகி வருவதாக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற, வடமாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கில் எரையாற்றிய வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், தண்ணீர் நாடுகளுக்கு இடையிலும், சமூகங்களுக்கு இடையிலும் கசப்புணர்வுகளையும் பகைமையும் வளர்க்க கூடிய எரிபொருளாக மாறுவதற்கான சூழ்நிலை காணப்படுவதாக கூறினார். நாடுகளுக்கு இடையில் மற்றுமொரு யுத்தம் தோன்றுவதற்கான காரணியாக தண்ணீர்

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறையில், கலாசார மத்திய நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது(காணொளி)

Posted by - January 28, 2017

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறையில், கலாசார மத்திய நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை புலோலி தெற்கு புற்றளையில், உள்ளக அலுவல்கள் வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அமைச்சினால் இக்கலாசார மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. கலாசார மத்திய நிலையத்தை கலாசார அமைச்சர் எஸ்.பி.நாவின்ன மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். இதன்போது, கொழும்பு தாமரைத் தடாகத்தில் நடைபெற்ற தேசிய கலாசார விழாவில் நடனமாடிய மாணவி,