கிணறுகளுக்கு அருகில் மலசலகூட குழிகள் அமைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்- வசந்தி அரசரட்ணம்(காணொளி)

326 0

வடக்கு மாகாணத்தில் கிணறுகளுக்கு அருகில் மலசலகூட குழிகள் அமைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் கேட்டுக்கொண்டார்.

யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற, வடமாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கில் உரையாற்றிய யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம், வடக்கு மாகாணத்தில் கிணறுகளுக்கு அருகில் மலசலகூட குழிகள் அமைக்கப்படுவதை தடுப்பதற்கு, வடக்கு மாகாணசபை முக்கிய சட்டங்களை அமுல்ப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

வடக்கு மகாணத்தில் அமைக்கப்பட்ட பல குளங்கள் சேதமடைந்துள்ளதாகவும், சேதமடைந்த குளங்களை தூர்வாரி மீண்டும் புனரமைக்க வடக்கு மாகாணசபை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் மேலும் தெரிவித்தார்…..