ஏறாவூரில் ரீ-56 ரக துப்பாக்கி மீட்பு

Posted by - January 31, 2017

மட்டக்களப்பு, ஏறாவூர் சவுக்கடிக் காட்டுப் பகுதியில் வீசப்பட்டுக் கிடந்த துப்பாக்கியொன்றை தகவலொன்றின் பேரில் தாம் மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று பிற்பகல் 119 இற்கு இரகசியத் தகவல் ஒன்று கிடைத்ததன் பேரில் ஏறாவூர் பொலிஸார் விரைந்து செயற்பட்டு தேடுதலில் ஈடுபட்டனர். அவ்வேளையில் பயன்படுத்தத் தக்க வகையில் உள்ள ரீ-56 ரக துப்பாக்கி ஒன்று காட்டில் வீசப்பட்டுக் கிடந்த நிலையில் மீட்கப்பட்டது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது ஏறாவூர் நகர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின்பேரில் கைது

வடமாகாண அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றதன் பின்னரே கனடா சென்றேன் – சீ.வி விக்னேஸ்வரன்

Posted by - January 31, 2017

கனடா ஒன்றாரியோ மாநிலத்திற்கா ன விஜயம் தொடர்பாக வடமாகாண அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றதன் பின்பாகவே சென்றிருந்தேன் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் எதிர்கட்சி தலைவரு க்கு பதிலளித்துள்ளார். வடமாகண சபையின் 83ம் அமர்வு இன்றைய தினம் மாகாணசபை பேர வை செயலகத்தின் சபா மண்டபத்தி ல் நடைபெற்றிருந்தது. இதன்போது எதிர்கட்சி தலைவர் சி.தவராசா முத லமைச்சரை நோக்கி கனடா நாட்டின் ஒன்றாரியோ மாநிலத்தின் பிறம்ப்ர ன், மார்க்கம் நகரங்களுக்கும் முறை யே முல்லைத்தீவு, வவுனியா நகரங்

விபத்தில் ஒருவர் பலி – ஒருவர் காயம்

Posted by - January 31, 2017

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி கங்கை பாலத்துக்கருகில் இன்று முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியானார். பாரவூர்தி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதிக் கொண்டதிலே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொருவர் திருகோணமலை பொது மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் மூதூர் பவர் ஹவுஸ் வீதியை சேர்ந்த 40 வயது மதிக்கதக்க ஒருவரே பலியானார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை மூதூர் காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் கடையுடைப்பு – சந்தேக நபர்கள் துப்பாக்கியுடன் கைது

Posted by - January 31, 2017

வவுனியாவில் இன்று அதிகாலை இரு கடைகள் உடைக்கப்பட்டு திருப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இளைஞனின் வீட்டிற்கு சென்ற பொலிஸார் குறித்த நபரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். மேலும் சந்தேகநபரது வீட்டில் நடத்திய சோதனையின் போது துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை மேலதிக விசாரணைகளை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை அதிரடிப்படையினர் நடாத்திய திட்டமிட்ட இனப்படுகொலையாக, மன்னார் வட்டக்கண்டல் படுகொலை அமைந்துள்ளதாகவுள்ளது(காணொளி)

Posted by - January 31, 2017

1952ஆம் ஆண்டு இங்கினியாக்கல என்ற பகுதியில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு எதிராக அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுத்திருந்தால், வட்டக்கண்டல் படுகொலை மாத்திரமல்ல ஏனைய படுகொலைகளும் நடந்திருக்காது என, வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார். மன்னார் வட்டக்கண்டல் கிராமத்தில் இடம்பெற்ற படுகொலையின் 32ஆம் ஆண்டு நினைவு தினத்தில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே வடக்கு மாகாண முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கை அதிரடிப்படையினர் நடாத்திய திட்டமிட்ட இனப்படுகொலையாக, மன்னார் வட்டக்கண்டல் படுகொலை அமைந்துள்ளதாகவும் வடக்கு மாகாண முதலமைச்சர் இதன்போது

அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிய உழவு இயந்திரங்களையும், சாரதிகளையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்(காணொளி)

Posted by - January 31, 2017

கிளிநொச்சி தர்மபுரம், கல்லாறு, பிரமந்தனாறு ஆகிய பகுதிகளில், அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிய ஏழு உழவு இயந்திரங்களையும், சாரதிகளையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப்பொலிஸ்மா அதிபரின் உத்தரவிற்கு அமைவாக, கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட போதைப்பொருள் குற்றத்தடுப்பு விசேட பொலிசார், சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டுவருகின்றனர். இதன் போது அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிய ஏழு உழவு இயந்திரங்களையும், அதன் சாரதிகளையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கிளிநொச்சி தருமபுரம், கல்லாறு, பிரமந்தனாறு ஆகிய பகுதிகளில் மணல் ஏற்றிய உழவு இந்திரங்களுடன் கைதுசெய்யப்பட்டவர்கள் நாளையதினம்

மன்னார் வட்டக்கண்டல் கிராமத்தில் இடம்பெற்ற படுகொலையின் 32ஆம் ஆண்டு நினைவு தினம் (காணொளி)

Posted by - January 31, 2017

மன்னார் வட்டக்கண்டல் கிராமத்தில் இடம்பெற்ற படுகொலையின் 32ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது. மன்னார் மாந்தை மேற்கு வட்டக்கண்டல் கிராமத்தில் இடம்பெற்ற படுகொலையின் 32ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று மன்னார் வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்றது. வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் ஏ.தேவதாஸ் தலைமையில் நினைவு நிகழ்வுகள் நடைபெற்றன. வட்டக்கண்டல் கிராமத்தில் 1985ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் திகதி வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர்,

கிளிநொச்சி கண்ணகைபுரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை, சிறுவர் பூங்கா திறப்பு விழா(காணொளி)

Posted by - January 31, 2017

கிளிநொச்சி கண்ணகைபுரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை, சிறுவர் பூங்கா திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அத்துடன் கிளிநொச்சி கண்ணகைபுரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில், தரம் ஐந்;து புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மற்றும் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று நடைபெற்றது. வடக்கு மாகாண கல்வியமைச்சின் கீழ், மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் சிறுவர் பூங்கா நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. வித்தியாலய அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்

செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நிறைவுகாண் மருத்தசேவை உத்தியோகத்தர்களுக்கான விடுதி திறந்துவைக்கப்பட்டது(காணொளி)

Posted by - January 31, 2017

வவுனியா செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நிறைவுகாண் மருத்தசேவை உத்தியோகத்தர்களுக்கான விடுதி நேற்று திறந்துவைக்கப்பட்டது. நிறைவுகாண் மருத்த சேவை உத்தியோகத்தர்களுக்கான விடுதியை, வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் நேற்று திறந்து வைத்தார். சுகாதார சேவையினை வலுப்படுத்தும் நோக்கத்தினை அடிப்படையாக கொண்டு, வட மாகாண சுகாதார அமைச்சரின் மாகாண குறித்தொகுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ், 9 மில்லியன் ரூபாய் செலவில் விடுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தின்மக்கழிவுகளை சேகரிக்கும் கழிவுத் கட்டிடத்தொகுதியோன்றும் 1.2 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டு

யாழ்ப்பாணம் நாவற்குழியில், தேசிய வீடமைப்பு அதிகார சபையால் வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன(காணொளி)

Posted by - January 31, 2017

  யாழ்ப்பாணம் நாவற்குழியில், தேசிய வீடமைப்பு அதிகார சபையால் 250 வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் மீள்குடியேறியுள்ள தமிழ், சிங்கள மக்களிற்கென 250 வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. குறித்த பகுதியில் 250 தமிழ் மற்றும் சிங்கள குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டத்தை வழங்க, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய வீடமைப்பு அதிகாரசபை தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, நாவற்குழி மேற்கு பகுதியில்