வவுனியாவில் இன்று அதிகாலை இரு கடைகள் உடைக்கப்பட்டு திருப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இளைஞனின் வீட்டிற்கு சென்ற பொலிஸார் குறித்த நபரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
மேலும் சந்தேகநபரது வீட்டில் நடத்திய சோதனையின் போது துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை மேலதிக விசாரணைகளை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.