மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்-பந்துல குணவர்தன

Posted by - February 7, 2017

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கோரியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், இலங்கை மத்திய வங்கிக்கு சொந்தமான 662 மில்லியன் ரூபா பணத்தை அர்ஜூன் மகேந்திரன் மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. மத்திய வங்கியின் உள்ளக கணக்காய்வு நடவடிக்கைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட

எழுக தமிழ் நிகழ்வில் கலந்து கொள்ள வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தீர்மானம்

Posted by - February 7, 2017

மட்டக்களப்பில் எதிர்வரும் 10.02.2017 அன்று நடைபெற உள்ள எழுக தமிழ் நிகழ்வில் கலந்து கொள்ள வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தீர்மானித்துள்ளார்.

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவிற்கு பிணை வழங்குவது குறித்து நீதிமன்றில் பரிசீலனை

Posted by - February 7, 2017

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவிற்கு பிணை வழங்குவது குறித்து இன்று நீதிமன்றில் பரிசீலனை செய்யப்பட உள்ளது. ரக்கர் வீரர் வசிம் தாஜூடீன் படுகொலை சம்பவம் தொடர்பில் அனுர சேனாநாயக்க கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் பிணை வழங்குமாறு கோரி சட்டத்தரணிகள் ஊடாக அனுர சேனாநாயக்க நேற்று மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பில் நாளை பரிசீலனை செய்யப்படும் என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மனிலால் வைத்தியதிலக்க அறிவித்திருந்தார். இந்த வழக்கு

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற 500 பேர் கைது

Posted by - February 7, 2017

இராணுவச் சேவையிலிருந்து முறையாக விலகாது விடுமுறை அறிவிக்காது சேவைக்கு சமூகமளிக்காத 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற படைவீரர்களை கைது செய்யும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன தெரிவித்துள்ளார். இதன்படி, நேற்று வரையில் உயர் அதிகாரி ஒருவர், 313 இராணுவ உத்தியோகத்தர்கள், 133 கடற்படை உத்தியோகத்தர்கள் மற்றும் 11 விமானப்படை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என

பொலிஸ் மருத்துவமனையில் திருட்டு

Posted by - February 7, 2017

பொலிஸ் மருத்துவமனையில் களஞ்சியப் படுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான மருந்துகள் காணாமல் போயுள்ளன. பொலிஸ் மருத்துவமனையின் நடவடிக்கைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, இது தொடர்பில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தற்போழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாரஹேன்பிட்டி பொலிஸ் மருத்துவமனையில் பெருமளவான மருந்துகள் காணாமல் போயுள்ளதாகக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்தப் பரிசோதனையினை மேற்கொண்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பகுதியில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது

Posted by - February 7, 2017

நெடுந்தீவு கடற்பகுதியில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பகுதியில் வைத்து நேற்றிரவு கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த மீனவர்களின் படகொன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மீனவர்களை யாழ்ப்பாணம் நீரியல் வளத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனையடுத்து நீரியல் வளத் திணைக்களத்தினர், அவர்களை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முதலாம் திகதியும் படகொன்றுடன் ஐந்து தமிழக மீனவர்களை நெடுந்தீவு கடற்பரப்பில்

தலவாக்கலை – மிடில்டன் இடுகாட்டு பகுதியில், உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம்

Posted by - February 7, 2017

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை – மிடில்டன் இடுகாட்டு பகுதியில், உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது. தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கு அண்மித்த பகுதியில் மிடில்டன் தோட்ட இடுகாடு பகுதியில் இந்த சடலம் இன்று காலை மீட்க்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர். சடலம் அடையாளம் காணமுடியாத நிலையில் உருக்குலைந்து காணப்படுவதாகவும், அருகில் மனித எச்சங்கள் காணப்படுதவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மீட்க்கப்பட்ட மனித எச்சங்களை

விமல் வீரவங்ச தொடர்ந்தும் விளக்கமறியல்

Posted by - February 7, 2017

அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததன் மூலம், 9 கோடி ரூபா நஸ்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதன்படி பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வரும் விமல் வீரவங்ச, இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து எதிர்வரும் 20ம் திகதி வரை முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஷவிற்கு டுபாய் வங்கியில் கணக்கு உண்டு-சந்திரிக்கா பண்டாரநாயக்க

Posted by - February 7, 2017

நாமல் ராஜபக்ஷவிற்கு டுபாய் வங்கியில் கணக்கு உண்டு என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். நாமல் ராஜபக்ஷ டுபாய் வங்கியில் மில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்கள் வைப்பிலிடப்பட்டுள்ளமை குறித்த விபரங்களை காவல்துறையினர் திரட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் இது தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு காவல்துறையினர் வங்கியிடம் கோரியுள்ள போதிலும், வங்கி தகவல்களை வழங்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். எவ்வித தகவல்களும் இன்றி நாமலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ள அவர் சிலருக்கு

ஜெயலலிதா மரணம் : மருத்துவர் குழுவின் 10 முக்கிய தகவல்கள்

Posted by - February 7, 2017

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரம் குறித்து மருத்துவர் குழு வெளியிட்ட 10 முக்கிய தகவல்கள்