‘ஜெனீவா அழுத்தங்களை சமாளிப்பதற்கே புலி நாடகம்’ – சிறிதரன்

Posted by - February 8, 2017

‘தமிழ் மக்களை, அரசாங்கம் தொடர்ந்தும் திறந்தவெளிச் சிறைச்சாலையில் வைத்திருப்பதற்கு முயற்சிக்கிறதா” என்று கேள்வியெழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, “ஜெனீவாவில் ஏற்படும் அழுத்தங்களை சமாளிப்பதற்கு புலிகள் மீண்டும் மீளெழுகின்றனர் என்ற நாடகத்தை அரங்கேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறதா” என்றும் வினவியது. நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, கூட்டமைப்பு எம்.பியான சிறிதரன் மேற்கண்டவாறு வினவினார். “வடக்கு, கிழக்கில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் செல்லும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் எப்பொழுதும் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் புலனாய்வாளர்கள் பின்தொடர்வார்கள். இவ்வாறான நிலையில்

யாழில் ரணிலின் உருவபொம்மை எரிப்பு

Posted by - February 8, 2017

மாலபே சயிடம் தனியார் மருத்துவக் கல்லூரியை தடைசெய்யக் கோரி அனைத்துப்பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மருத்துவபீட மாணவர் ஒன்றிய குழு ஆகியன இணைந்து யாழ். நகரில் ​நேற்று போராட்டம் ஒன்றை நடத்தினர். இதன்போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உருவபொம்மையும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவு, மன்னாரில் மலேரியா பரவுவதை தடுக்க நடவடிக்கை

Posted by - February 8, 2017

கச்சத்தீவு மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களில் மலேரியா நோய் பரவுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையின்படி அண்மையில் பேசாலை பகுதியில் கிணறொன்றுக்குள் இருந்து சில மலேரியா கொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெறவுள்ள திருவிழா காலப்பகுதிக்குள் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் மற்றும் இந்தியர்கள் கலந்துகொள்ளும் காரணத்தினால் அவர்கள் மத்தியில் மலேரியா நோய் சுலபமாக பரவும் அபாயம் இருப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதனை

தொற்றா நோய்களைத் தடுக்க விஷேட வேலைத் திட்டம்

Posted by - February 8, 2017

தொற்றா நோய்களால் பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பது குறித்த விஷேட வேலைத் திட்டங்கள் சிலவற்றை செயற்படுத்தவுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் தலைமையின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. தேசிய மட்டத்திலான திறமையை வௌிப்படுத்தும் விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு முன்னுரிமையளித்து, பாடசாலை விளையாட்டு ஆலோசகர்கள் 3800 பேரை நியமிக்க தேவையான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு 28-ந்தேதி முற்றுகை போராட்டம்: பி.ஆர்.பாண்டியன்

Posted by - February 8, 2017

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு 28-ந்தேதி முற்றுகை போராட்டம் நடைபெறும் என பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார்.

குடிவரவு குடியகல்வு சட்டங்களை கடினப்படுத்துவது அவசியம்

Posted by - February 8, 2017

நாட்டின் குடிவரவு குடியகல்வு சட்டங்களை கடினப்படுத்துவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதாக, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நாட்டின் குடிவரவு குடியகல்வு சட்டங்கள் தளர்வாக உள்ளமையால், இனவாதிகளுக்கு இலங்கைக்குள் நுழைய வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயம் குறித்து தௌிவுபடுத்த பொதுபல சேனா அமைப்பு குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நிமல் ரணசிங்கவை சந்தித்தனர். இதன்பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட போதே ஞானசார தேரர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

நவீன முறையில் தர்பூசணி சாகுபடி: விவசாயிகள் புதிய முயற்சி

Posted by - February 8, 2017

மாநிலம் முழுவதும் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் எடப்பாடி பகுதியில் நவீன முறையில் தர்பூசணி சாகுபடி செய்யும் புதிய முயற்சியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.

துரோகி என்ற பட்டத்தை தவிர்க்கவே பதவியை ராஜினாமா செய்தேன் – ஓ.பன்னீர் செல்வம்

Posted by - February 8, 2017

தன்னை யாரும் துரோகி என்று சொல்லிவிடக் கூடாது என்பதற்காகத்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

விமலின் வழக்கு விசாரணையின் போது கூச்சலிட்டவருக்கு தண்டனை அறிவிப்பு

Posted by - February 8, 2017

தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட போது, நீதிமன்றத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட நபருக்கு, ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விமல் உள்ளிட்ட இருவரை கடந்த 24ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, சுதேஷ் பிரேமலால் பொன்சேகா என்பவர் நீதவானை நோக்கி கைகளை நீட்டியபடி கூச்சலிட்டு குழப்பநிலையை தோற்றுவித்ததாக கூறப்பட்டு, கைதுசெய்யப்பட்டார். இதனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கமைய மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட

யானைத் தந்தங்களில் இருந்து உருவாக்கப்படும் பொருட்களுக்கு பிரிட்டன் தடை

Posted by - February 8, 2017

யானை உள்ளிட்ட சில விலங்குகளின், தந்தங்கள் மற்றும் கொம்புகளில் இருந்து உருவாக்கப்படும் பொருட்களுக்கு பிரிட்டன் அரசு தடை விதித்துள்ளது.