ரோஹிங்கிய மக்களுக்கு எதிரான வன்முறை ஓர் “இன அழிப்பு” – அமெரிக்கா
மியன்மாரில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் ஓர் “இன அழிப்பு” என ஐக்கிய அமெரிக்க பிரகடனம் செய்துள்ளது. ரோஹிங்கிய மக்கள் மியன்மாரின் இராணுவத்தினரால் தாங்கமுடியாத துன்பங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக ஐக்கிய அமெரிக்க வெளியுறவுச்செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் குற்றஞ்சாட்டியுள்ளார். ரோஹிங்கிய கிளர்ச்சியாளர்கள் வன்முறைகளை தூண்டுவதாக இராணுவத்தினர் குற்றம் சுமத்தியிருந்தாலும், இராணுவத்தினரின் கொடூரமான தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு ராக்கெய்ன் மாநிலத்தில் இடம்பெறுவது ரோஹிங்கியர்களுக்கு எதிரான இன அழிப்பு என கிடைக்கப்பெறும் தகவல்களை கவனமாவும் முழுமையாகவும் ஆராய்ந்ததன் பின்னர்

