பாடசாலை சீருடை வவுச்சர் சரியான முறையில் வழங்கப்படும் – கல்வி அமைச்சர்

11525 0

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை பெறுக்கொள்வதற்கான வவுச்சர் அட்டைகள் இம்முறையும் சரியான முறையில் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

சீருடைகளுக்கான வவுச்சர் அட்டைகள் இன்னும் அச்சிடப்படுவதாகவும் பாடசாலைகளுக்கு இன்னும் வவுச்சர் அட்டைகள் வழங்கப்படவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்த கருத்துக்கு விடையளிக்கும் போதே கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வவுச்சர் அச்சிடும் வேளைகளில் ஒரு பகுதி நிறைவடைந்திருப்பதாகவும், வவுச்சர் அட்டைகள் சரியான காலப்பகுதிக்குள் வழங்கப்படும் எனவும், பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட பகுதிகளுக்கு வவுச்சர் விநியோகிப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 2018ம் ஆண்டில் 2 இலட்சம் ஐ பேட் (TAB ) உபகரணங்கள் பாடசாலைகளுக்கு வழங்கவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment