கொழும்பில் மனோ கணேசன் தனித்து போட்டியிடுவது சரியானதே – விக்கினேஸ்வரன்

Posted by - December 28, 2017

அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி தனித்தும், சேர்ந்தும் பல்வேறு உள்ளூராட்சி சபை தேர்தல்களில் போட்டியிடுவது சரியானதே என்று வட மாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். குறிப்பாக கொழும்பு மாநகரசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதன் மூலம் அரசாங்கத்தினுள் தன்னை பலப்படுத்திக் கொள்ளவும் எமது தனித்துவத்தை வெளிக்காட்டவும் அவர் முனைவது சாலச்சிறந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று கொழும்பில் அமைச்சர் மனோ கணேசனுக்கும், வட மாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பையடுத்து ஊடகவியலாளர்களிடம் இந்த

இன்று வரையில் தேர்தல் சட்ட மீறல் முறைப்பாடுகள் 32, கைது 34 பேர்- பொலிஸ்

Posted by - December 28, 2017

உள்ளுராட்சி சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட கடந்த 9 ஆம் திகதி முதல் இன்று (28) காலை 6 மணி வரையான காலப் பகுதியில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பிலான 32 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. மேற்படி முறைப்பாடுகள் தொடர்பில் 34 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

பாதாள உலகக்குழு அரசியல்வாதி : STF பெற்றுக்கொண்டதன் விளக்கம் – மனோ கணேசன்

Posted by - December 28, 2017

பாதாள உலகக்குழு அரசியல்வாதியிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் தாம் விசேட பாதுகாப்பு பெற்றுக்கொண்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தமது அரசியல் கட்சியின் உறுப்பினர்களினால் இந்த பாதுகாப்பு வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு வடக்கின் பாதாள உலகக்குழு அரசியல்வாதி ஒருவரிடமிருந்து தம்மையும் கட்சி முக்கியஸ்தர்களையும் பாதுகாத்துக் கொள்ள இவ்வாறு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு

தமக்கும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் – ஹக்கீம், திகாம்பரம்

Posted by - December 28, 2017

தமக்கும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென அமைச்சர்களான பழனி திகாம்பரம் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். அமைச்சர் மனோ கணேசனுக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதி முக்கிய பிரபுகளுக்கு வழங்கப்படும் விசேட அதிரடிப்படை பாதுகாப்பினை மனோ கணேசனுக்கு வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார். கொழும்பு மாநகரசபை தேர்தலில் சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் மனோ கணேசனுக்கு விடுக்கப்பட்டுள்ள

கூட்டு எதிர்க்கட்சி ஆதரவாளர் சோமவீர சந்திரசிறி ஜனாதிபதியுடன் இணைவு

Posted by - December 28, 2017

கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்பட்டு வந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மகாஜன எக்சத் பெரமுனவின் உப தலைவருமான சோமவீர சந்திரசிறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கியுள்ளார். இன்று காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை தந்த அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு தமது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும், உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் வெற்றிக்கு உழைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் 20 பேர் விடுதலை

Posted by - December 28, 2017

சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 20 மீனவர்கள் நேற்றைய தினம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மீனவர்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் இவர்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் விடுவிக்கப்பட்டுள்ள மீனவர்களுடைய 7 படகுகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த வருடத்தில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மின்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 57 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களுள் 37 மீனவர்களின் விசாரணைகள் இதுவரை நிறைவடையவில்லை என்பதால் இவர்களை விடுவிக்க முடியாத நிலைக் காணப்படுவதாக வட

அரசியலமைப்பு பேரவையிலிருந்து விஜேதாச ராஜபக்ஷ இராஜினாமா

Posted by - December 28, 2017

அரசியலமைப்பு பேரவையிலிருந்து விலகுவதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறித்த இராஜினாமா தொடர்பிலான கடிதம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். பத்து பேர் அடங்கிய குறித்த பேரவைக்கு பிரதமரின் பணிப்பின் பேரில் விஜேதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டிருந்தார். 2015 செப்டம்பர் மாதம் 9ம் திகதி வழங்கப்பட்டிருந்த அவரது பதவி 2018 செப்டம்பர் 9ம் திகதி முடிவடையவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கேப்பாபுலவில் காணிகள் விடுவிப்பு

Posted by - December 28, 2017

முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபுலவில் இராணுவத்தினர் வசம் உள்ள மக்களின் காணிகளில் 133 ஏக்கர் காணி இன்று இராணுவத்தினரால் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வு இன்று முல்லைத்தீவில் நடைபெற்றது. இன்றை நிகழ்வில் வற்றாப்பளை சீனிமோட்டையில் 17 குடும்பங்களுக்கான 21.84 ஏக்கர் காணியும், கோப்பாபிலவில் 68 குடும்பங்களுக்கான 111-5 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 85 குடும்பங்களுக்கான காணி இன்று உரியவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. 138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த மார்ச் மாதம்

திறைசேரியின் கண்காணிப்பில் அரிசி இறக்குமதி

Posted by - December 28, 2017

திறைசேரி மூலமான நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பின் கீழ் அரிசியை இறக்குமதி செய்வதற்கான பங்களிப்பு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதேபோன்று அரிசியை இறக்குமதி செய்வதற்காக எத்தகைய தனியார் நிறுவனங்களுக்கும் சதொச நிறுவனங்களுக்கு வசதிகளை செய்துகொடுக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. அத்தியாவசிய உற்பத்திப்பொருட்களை போதியளவு சந்தைக்கு விநியோகிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.