அரசியலமைப்பு பேரவையிலிருந்து விஜேதாச ராஜபக்ஷ இராஜினாமா

227 0

அரசியலமைப்பு பேரவையிலிருந்து விலகுவதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குறித்த இராஜினாமா தொடர்பிலான கடிதம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பத்து பேர் அடங்கிய குறித்த பேரவைக்கு பிரதமரின் பணிப்பின் பேரில் விஜேதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டிருந்தார்.

2015 செப்டம்பர் மாதம் 9ம் திகதி வழங்கப்பட்டிருந்த அவரது பதவி 2018 செப்டம்பர் 9ம் திகதி முடிவடையவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment