நிலையவள்

தலவாக்கலை சென்கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் புதிய ரக தேயிலை அறிமுகம்

Posted by - January 21, 2017
தலவாக்கலை சென்கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் 25 வருடகால ஆய்வுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக தேயிலை அறிமுகமும், குறுந்தகவல் மற்றும் தகவல் அறியும் நிலையமும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் இன்று  அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில்…
மேலும்

ஊழல் வழக்குகளை விசாரிக்க இரண்டு மேல் நீதிமன்றங்கள்-சரத் அமுனுகம

Posted by - January 21, 2017
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஊழல், மோசடி, அரச வளங்களை தவறாக பயன்படுத்தியமை சம்பந்தமாக குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு எதிராக மேற்கொண்ட விசாரணைகள் மற்றும் நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்ய இரண்டு மேல் நீதிமன்றங்களை ஒதுக்குவது குறித்து அரசாங்கம் கவனம்…
மேலும்

மாணவர்களிடத்தில் சமூக நோய்கள் வேகமாகப் பரவும் ஆபத்தான நிலைமை-கல்விசாரா ஊழியர்கள் சங்கம்

Posted by - January 21, 2017
பாடசாலை மாணவர்களிடத்தில் சமூக நோய்கள் வேகமாகப் பரவும் ஆபத்தான நிலைமை உருவாகி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையிலும், அனுபவ ரீதியாகவும் இந்த எச்சரிக்கையை விடுப்பதாக கல்விசாரா ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனைத் தடுப்பதற்கு மாணவர்களுக்கு பாலியல் கல்வி வழங்கப்படல்…
மேலும்

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்லும் பெண்களுக்கு தொழில் முன் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்-அனோமா கமகே

Posted by - January 21, 2017
வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்லும் பெண்களுக்கு தொழில் முன் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என பிரதியமைச்சர் அனோமா கமகே தெரிவித்துள்ளார். பயிற்சி இன்றி தொழிலுக்காக வெளிநாடு செல்பவர்களே பல்வேறுபட்ட இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேரிடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் பெண்களுக்கு பயிற்சி வழங்கும்…
மேலும்

வெள்ளவத்தையில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவித்து போராட்டம்

Posted by - January 21, 2017
கொழும்பு வெள்ளவத்தையில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவித்து  போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.வெள்ளவத்தை Laugfs Super Market முன்பாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இடையில் காணப்படும் கருத்து முரண்பாடுகளை களைய நடவடிக்கை

Posted by - January 21, 2017
அரசாங்கத்தின் இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இடையில் காணப்படும் கருத்து முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான இரண்டு பிரதான கட்சிகளும் நேருக்கு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த…
மேலும்

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு, மஹிந்த ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted by - January 21, 2017
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்பிற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்ரம்ப்பின் தலையீடுகள் இல்லாத வெளிநாட்டு கொள்கைகளை தான் வரவேற்பதாகவும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார். ட்ரம்ப், ஒரு வெற்றிகரமான ஜனாதிபதியாக அவரது பணிகள் தொடர வேண்டும் என…
மேலும்

புதிய எக்ஸ்பிரஸ் புகையிரத சேவைகள் வார இறுதியில் அறிமுகம்

Posted by - January 21, 2017
கொழும்பு கோட்டையிலிருந்து மாத்தளை நோக்கிச் செல்ல புதிய எக்ஸ்பிரஸ் புகையிரத சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விசேட போக்குவரத்து சேவை வார இறுதியிலேயே அறிமுகப்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க,வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 2.20 மணியளவில் கோட்டை புகையிரத நிலையத்தில்…
மேலும்

வவுனியாவில் அரச பேருந்துகள் மோதி விபத்து

Posted by - January 21, 2017
வவுனியாவில் பழைய பேருந்து தரிப்பிடத்துக்கு முன்பாக இரு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. கல்முனையிலிருந்து முல்லைத்தீவு செல்லவிருந்த பேருந்தும் பழைய பேருந்து தரிப்பிடத்தில் இருந்து பிரதான வீதிக்கு செல்ல முற்பட்ட பேருந்தும் ஒன்றை ஒன்று மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் பயணிகளுக்கு எவ்வித…
மேலும்

மக்களின் உணர்வுகளை மதித்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு இந்திய மத்திய மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும்- எம்.கே.சிவாஜிலிங்கம்;(காணொளி)

Posted by - January 21, 2017
  மக்களின் உணர்வுகளை மதித்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு இந்திய மத்திய மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேட்டுக்கொண்டார். யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவை என்ற பெயரில் இயங்கி வரும் அமைப்பினால் யாழ்ப்பாண இந்தியத்துணைத்…
மேலும்