நிலையவள்

நுவரெலியா, ஹட்டன் கல்வி பாடசாலைகளுக்கு ஆங்கில நூல்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு(காணொளி)

Posted by - March 25, 2017
நுவரெலியா, ஹட்டன் கல்வி பாடசாலைகளுக்கு ஆங்கில நூல்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. நுவரெலியா, ஹட்டன் டிக்கோயா றோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட 150 பாடசாலைகளுக்கு ஆங்கில நூல்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று ஹட்டன் இந்து…
மேலும்

மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில், மாகாண பணிப்பாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு(காணொளி)

Posted by - March 25, 2017
  மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில், மாகாண பணிப்பாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளராக கடமையேற்றுள்ள திருமதி கவிதா உதயகுமார் மற்றும் மேலதிக அரசாங்க அதிபராக பதவி உயர்வு…
மேலும்

மட்டக்களப்பில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையினைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - March 25, 2017
மட்டக்களப்பில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையினைக் கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு, கல்குடா பகுதியில் இரண்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையினைக் கண்டித்து மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த…
மேலும்

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் நான்காவது நாளாக இன்றும்….(காணொளி)

Posted by - March 25, 2017
பன்னங்கண்டி மக்களின் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்கின்றது. கிளிநொச்சி பன்னங்கண்டி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்கள் தமது குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும் அடிப்படை வசதிகள் நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன  இதுவரை கிடைக்கவில்லை என்று கூறி…
மேலும்

பொது மக்களை காரணமின்றி கொன்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்- சந்திரிக்கா(காணொளி)

Posted by - March 25, 2017
பொது மக்களை காரணமின்றி கொன்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டார். காணாமல் போனவர்கள் கண்டறியப்பட வேண்டும் எனவும், அவர்களின்…
மேலும்

நாட்டிலுள்ள சகல மக்களும் சம உரிமையுடன் வாழவிட்டால் எமது நாட்டை முன்னேற்ற முடியாது- சந்திரிக்கா(காணொளி)

Posted by - March 25, 2017
நாட்டிலுள்ள சகல மக்களும் சம உரிமையுடன் வாழவிட்டால் எமது நாட்டை முன்னேற்ற முடியர்து என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேசசபையில் தேசிய நல்லிணக்கத்திற்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்குமான செயலகத்தினால் அமுல்படுத்தப்படுகின்ற பொருளாதார நிகழ்ச்சித்திட்ட ஆரம்ப…
மேலும்

குண்டுத்துளைக்காத பேருந்து ஒன்று கொள்வனவு

Posted by - March 25, 2017
கேகாலை சிறைச்சாலையில் இருந்து கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்துச்செல்வதற்கும் வருவதற்குமாக குண்டுத்துளைக்காத பேருந்து ஒன்று கொள்வனவு செய்யப்படவுள்ளது. சிறைச்சாலைகள் துறை அமைச்சர் டி எம் சுவாமிநாதன் இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 10 நாட்களுக்குள் இது கொள்வனவு செய்யப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில்…
மேலும்

கல்குடா மதுபானத் தொழிற்சாலைக்கு எதிராக நீதிமன்ற தடையுத்தரவை பெறுங்கள் – நஸீர்

Posted by - March 25, 2017
கல்குடாவில் நிர்மாணிக்கப்படுவதாக கூறப்படும் மதுபானத் தொழிற்சாலை எதிர்காலத்தில்  எந்தவொரு  அரசியல்  சூழ்நிலையின் கீழும் மீண்டும்  நிர்மாணிக்கப்படாமலிருக்கும் வகையில்  நீதிமன்ற தடையுத்தரவொன்றை  பெறுமாறு  வாழைச்சேனையின் பிரதேச சபையின் செயலாளருக்கு  கிழக்கு மாகாண முதலமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
மேலும்

ரஷ்யா உலங்கு வானூர்திகளை பழுதுபார்க்கும் நிலையம் இலங்கையில்

Posted by - March 25, 2017
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட உலங்கு வானூர்திகளை பழுதுபார்க்கும் நிலையம் ஒன்று இலங்கையில் நிறுவப்படவுள்ளது. மலேசியாவில் இடம்பெறும் கண்காட்சி நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட ரஸ்யாவின் இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு சேவையின் உதவி தலைவர் மிக்ஹெய்ல் பெட்டுவ்கொவ் இதனை தெரிவித்துள்ளதாக மலேசிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. உலங்கு…
மேலும்

மஹிந்தலையில் வீடு ஒன்றில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

Posted by - March 25, 2017
மஹிந்தலை பிரதேசத்தில் வீடு ஒன்றில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சீப்புகுளம் சந்தி பிரதேசத்தினை சேர்ந்த 37 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது. குறித்த நபர், கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர் என குற்றம் சுமத்தப்பட்டு சிறைச்சாலையில்…
மேலும்