பன்னங்கண்டி மக்களின் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்கின்றது.
கிளிநொச்சி பன்னங்கண்டி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்கள் தமது குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும் அடிப்படை வசதிகள் நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன இதுவரை கிடைக்கவில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வளவு காலமும் அடிப்படை உரிமை இல்லாத மக்களாக வாழ்ந்து விட்டோம் இனியும் வாழ முடியாது, தயவு செய்து எமக்கான காணி உரிமத்தினை வழங்குங்கள் எனக் கோரி ஆரம்பித்த கவனஈர்ப்பு போராட்டம், இன்று நான்காவது நாளாக தொடர்கின்றது.
தமக்கான காணி உரிமம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.