நுவரெலியா, ஹட்டன் கல்வி பாடசாலைகளுக்கு ஆங்கில நூல்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு(காணொளி)

254 0

நுவரெலியா, ஹட்டன் கல்வி பாடசாலைகளுக்கு ஆங்கில நூல்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

நுவரெலியா, ஹட்டன் டிக்கோயா றோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட 150 பாடசாலைகளுக்கு ஆங்கில நூல்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று ஹட்டன் இந்து மகா சபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

மலையக மாணவர்களின் ஆங்கில வாசிப்பு திறனை மேம்படுத்தும் நோக்கில் நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டதாக ரொட்டரி கழகத்தினர் தெரிவித்தனர்.

டிக்கோயா ரொட்டரி கழகத்தினர் ஏற்பாடு செய்த இந்நிகழ்வுக்கு கொழும்பு ஜெயா புத்தகசாலை, இராமாகிருஷ்ண மிஷன் ஆகிய அனுசரனை வழங்கியிருந்தன.

இந்நிகழ்வில் ஸ்ரீ இராமாகிருஷ்ண மிஷன் தலைவர் சர்வ ரூபாநந்த மகராஜ், டிக்கோயா ரொட்டரி கழக தலைவர் உட்பட உறுப்பினர்கள், ஹட்டன் கல்வி வலய அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.