மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில், மாகாண பணிப்பாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு(காணொளி)

287 0

 

மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில், மாகாண பணிப்பாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளராக கடமையேற்றுள்ள திருமதி கவிதா உதயகுமார் மற்றும் மேலதிக அரசாங்க அதிபராக பதவி உயர்வு பெற்றுச்சென்றுள்ள முன்னாள் கிராம அபிவிருத்தி திணைக்கள மாகாண பணிப்பாளர் கே.அருந்தவராஜா ஆகியோரின் சேவையினை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில் மாவட்ட உத்தியோகத்தர் கே.மோகன் பிறேம்குமார் தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்களத்தில் நடைபெற்றது.

இதன்போது அவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன், நினைவு சின்னங்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலங்களில் கடமையாற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்திய்கத்தர்கள், தையல் போதனாசிரியர்கள், மட்டக்களப்பு கிராம அபிவிருத்தி திணைக்கள மாவட்ட அலுவலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்