உத்தரபிரதேச மாநிலத்தில் குடும்ப வறுமை காரணமாக அரசின் இழப்பீடு தொகை பெறுவதற்காக புலிக்கு முதியவர்களை இரையாக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிக்கிம் எல்லைப் பகுதியில் ராணுவத்தை விலக்குமாறு சீனாவின் கோரிக்கையை ஏற்க இந்தியா மறுத்து விட்டது. இதனால் இந்தியா – சீன எல்லையில் பதற்றம் அதிகரித்தபடி உள்ளது.
வியட்நாமில் சுற்றுச்சூழல் மாசுப்படுவதை கட்டுப்படுத்தும் விதமாக, 2030-ம் ஆண்டிற்குள் மோட்டார் சைக்கிள்களுக்கு தடை விதிக்க அந்நாட்டு தலைநகர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஏற்பட்ட விலை மாற்றம் பற்றி பொருட்களில் தனி ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்றும், பழைய விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமலுக்கு வந்துள்ளது. இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிதாக அறிமுகம் ஆகியுள்ள சரக்கு, சேவை வரிக்கான சேவைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.