மிகை வட்டியே தமிழக விவசாயிகளின் தற்கொலைக்குக் காரணம்

247 0

120 சதவீத மிகை வட்டியே தமிழக விவசாயிகளின் தற்கொலைக்குக் காரணம் என ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் தமிழகத்தல் ஏற்பட்ட வரட்சியை அடுத்து நூற்க்கணக்கான தமிழக விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர்.

இது தொடர்பில் தமிழக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட சிறப்பு குழு ஒன்று விசாரணைகளை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையின் படி நிதி நிறுவனங்களிடம் இருந்து வட்டிக்கு கடன் பெற்றவர்களே அதிகம் தற்கொலை செய்துகொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இவர்கள் 26 சதவீதத்தில் இருந்து 120 சதவீத வட்டிக்கு கடன் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்கொலை செய்து கொண்டவர்கள் அனைவரும் கருகிய பயிரை காப்பாற்ற இயலாத துயரத்தாலும், ஈடு செய்ய முடியாத கந்துவட்டி கடன் சுமையாலும் ஆழ்த்தப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.